62. காணத் தக்கன - தகாதன

 “ஓதுபொருள் கண்டோர்க்கு உறும்ஆசை, நீதியிலாப்

பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம், - சீதமலர்

கண்டோர்க்கு உறும்வாசம், கற்றுஅமைந்த நற்றவரைத்

கண்டோர்க்கு உடன் ஆம் கதி.” -- நீதிவெண்பா.


யாவராலும் சொல்லப்படுகின்ற செல்வத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் ஆசை மிகுதியாகும். நேர்மை இல்லாத தீயவரைக் கண்டவர்களுக்குத் தீமை உண்டாகும். குளிர்ச்சியான மலர்களைப் பார்த்தவர்களுக்கு மணம் உண்டாகும். கற்று அடங்கிய பெரியோர்களைக் கண்டவர்களுக்கு நல்ல கதி உடனே உண்டாகும்.


(பாதகர் - தீயோர்.  கற்று அமைந்த – கற்று அடங்கிய.  கதி - நல்லநிலை.)


No comments:

மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...