“கோறலும் நஞ்சு, ஊனைத் துய்த்தல் கொடுநஞ்சு,
வேறலும் நஞ்சு, மாறு அல்லானை, - தேறினான்
நீடாங்கு செயதலும் நஞ்சுஆம், இளங்கிளையை
நாடாதே தீதுரையும் நஞ்சு.” -- சிறுபஞ்சமூலம்.
ஓர் உயிரை உள்ளத்தில் அருள் இல்லாமல் கொல்லுதலும், ஒருவனுக்கு உயிரைக் கொல்லும் நஞ்சு போன்றது. அங்ஙனம் கொல்லப்பட்ட உயிரின் தசையைத் தின்னுதலும் கொடிய நஞ்சு போன்றது. தனக்கு எதிர் அல்லாதவனை, எதிர்த்து வெல்லுதலும் நஞ்சு போன்றது. ஒரு காரியத்துக்கு உரியவனென்று ஆராய்ந்து தெளியப்பட்டவனாகிய ஒருவன், அக் காரியத்தின் மேல் கால நீட்டிப்பு செய்தலும் நஞ்சு போன்றது. இளைத்த சுற்றத்தாரை ஆராயாமலே பழுது சொல்லுதலும் நஞ்சு போன்றது. (துன்பம் செய்பவை இவை என்று கூறப்பட்டது)
No comments:
Post a Comment