“பாவிதனம் தண்டிப்போர் பால்ஆகும் அல்லது, அருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே, - ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்குஆம், அன்றியே
தூயவருக்கு ஆகுமோ சொல்.” -- நீதிவெண்பா
சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகுமல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். (ஆகாது) அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.
(தனம் - செல்வம். மேவாது - சேராது, பொருந்தாது.)
No comments:
Post a Comment