“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த
பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று.” -- சிறுபஞ்சமூலம்.
தனக்குப் பிறனொருவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமை தரும். பிறர் செய்த தீமையை நினைத்துக் கொண்டே இருத்தல் சிறுமையாகும். தான் செய்த பிழைகள் கெடும்படி வாழ்தலும்; பல பொருள்களையுடைய செல்வர்களும், பெரியோர்களும் ஏளனம் செய்து நகைப்பது நீங்க வாழ்தலும் நன்மையாம்.
No comments:
Post a Comment