“அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,
கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை
கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு
அற்றோர்க்கு அழகு பொறையாம்.” -- நீதிவெண்பா
அன்னப் பறவை போன்றவளே! குயிலுக்கு உள்ள அழகு இனிய இசையே. கரும்புபோல் இனிக்கும் மொழியை உடைய பெண்களுக்கு அழகு கற்பே ஆகும். நிலைத்த கல்வியைக் கற்றவர்களுக்கு அழகு இரக்கமே ஆகும். பேராசை மயக்கத்தை விட்டவர்களுக்கு அழகு பொறுமையே ஆகும்.
(கன்னல் - கரும்பு. மன்னுகலை - நிலைத்த கல்வி. கருணை - இரக்கம்.)
No comments:
Post a Comment