14. தாழ்வினை அடைபவர்கள்

 


“பெற்றுஅமையும் என்னாப் பெரியோரும், பெற்றபொருள்

மற்றுஅமையும் என்றே மகிழ்வேந்தும், - முற்றியநன்

மானம்இலா இல்லாளும், மானம்உறு வேசியரும்

ஈனம் உறுவார் இவர்.”


பெற்றிருக்கும் பொருளே போதும் என்று மனம் அமையாத பெரியவர்களும், பெற்றுள்ள பொருளே போதும் என்று அமைந்து மனம் மகிழ்கின்ற வேந்தனும், மிகுந்த நாணம் இல்லாத மனைவியும், நாணம் கொண்ட வேசியும் ஆகிய நால்வரும் தாழ்வினை அடைவார்கள்.


(வேந்து - அரசன். மானம் - நாணம்.  ஈனம் - தாழ்வு.)


சிறுகாலையே அறம் செய்க

சிறுகாலையே செய்க ---      'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது. அற...