12. துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்

ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை

தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்

தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா


ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் (உலகத்தில் உள்ள யாவர்க்கும்) குற்றம் அற்ற  நல்ல அடிமை ஆவான். ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே,  எல்லா உலகத்தையும் தவறாமல் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

    (லோகம் - உலகம்.  வடசொல்.  ஆசு - குற்றம்.)


No comments:

நூலறிவும் நுண்ணறிவும்

நூலறிவும், நுண்ணறிவும் ----- "முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதுஉம்  கற்றனம் என்று களியற்க,-சிற்றுளியால்  கல்லும் தகரும், தகரா, கனங்குழ...