“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா
ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் (உலகத்தில் உள்ள யாவர்க்கும்) குற்றம் அற்ற நல்ல அடிமை ஆவான். ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே, எல்லா உலகத்தையும் தவறாமல் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.
(லோகம் - உலகம். வடசொல். ஆசு - குற்றம்.)
No comments:
Post a Comment