10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி,

எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும்

அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

அநந்தம் விழியென்று அறி.” — நீதிவெண்பா


மக்கள் எல்லார்க்கும் இரு கண்களே உள்ளன. நன்கு கற்றவர்களுக்கு ஊனக் கண் இரண்டோடு அறிவுக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய நகக் கண்கள் ஐந்தோடு சேர்த்து,  கண்கள் ஏழாகும். பொருந்துகின்ற நல் தவத்தால் அருள்ஞானம் பெற்றவர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு.

(அநந்தம் தவம் -  அழியாத தவம். அநந்தம் விழி - அளவில்லாத கண்கள். மூன்று விழி - ஊனக்கண் இரண்டும் அறிவுக்கண் ஒன்றும்.  விழி ஏழாவன – ஊனக்கண் இரண்டும், கொடுக்கும் கையில் உள்ள நகக் கண் ஐந்தும்.)


10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி, எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும் அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழி...