“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்
நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு
பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக
அஞ்சுமவன் கேட்பது அறிந்து.”
சொல்லுங்கால், பிச்சை எடுப்பவன் நொய்தான ஒரு துரும்பை விடவும் நொய்தான பஞ்சைக் காட்டிலும் மிகவும் எளியவன் ஆவான். அவ்வாறு மிகவும் நொய்தானவனை, வீசும் காற்றானது அடித்துச் செல்லாதோ என்றால், அக்காற்றும் கூடப் பிச்சை எடுப்பவனைத் தெரிந்துகொண்டு, வீடு வீடாக இரக்கும் அவன், தன்னிடம் ஏதேனும் இரப்பானோ என அஞ்சி அவனிடம் நெருங்க அஞ்சும்.