17. நயமான சொல்லால் நன்மையே

“நாவின் நுனியில் நயம்இருக்கின், பூமாதும்

நாவினிய நல்லோரும் நுண்ணுவார்; - நாவின்நுனி

ஆங்கடினம் ஆகில், அத்திருவும் சேராள்,முன்

ஆங்கே வரும்மரணம் ஆம்.” — நீதிவெண்பா


நாக்கின் நுனியில் இனியசொல் இருக்குமானால் மலர்மகளும், இனிய சொல்லை உடைய நல்லோரும் நெருங்கி இருப்பர்.  அல்லாமல், நாக்கு நுனியானது வன்சொற்கள் பேசி வலிதாகுமானால், மலர்மகளும் சேரமாட்டாள்.  அதனால் இறப்பும் வரும். (நயம் - இனிய சொல்.  பூமாது - மலர்மகள், இலக்குமி.)


No comments:

056. கொடுங்கோன்மை - 06. மன்னர்க்கு மன்னுதல்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் புகழ் நிலைக்க...