15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா

மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா

வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்

நொந்துஅறிகு வாளோ நுவல்.” — நீதிவெண்பா


துன்பப்பட்டுப் பிள்ளையைப் பெறும் துயரத்தை, பிள்ளை பெறாத மலடி பரிவோடு தெரிந்து கொள்வாளோ? அவள் பிள்ளை பெறும் துன்பத்தை அறிய மாட்டாள். அதுபோல, கற்றறிந்த பெரியவர்களின் பெருமையை, கற்றறிந்த பெரியோரே அறிவர். கற்றறியாத மற்றவரால் அறிந்து கொள்ள முடியாது.

(கனம் - பெருமை.  வந்தி - மலடி.   பரிவு - இரக்கம்.)


No comments:

ஏவா மக்கள் மூவா மருந்து

ஏவா மக்கள் மூவா மருந்து -----           எளிய சிறுசிறு தொடர்களே மக்களின் தேவையைக் குறித்து உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை என்று வால்ட்டர் பேட்டர...