“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா
மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்
நொந்துஅறிகு வாளோ நுவல்.” — நீதிவெண்பா
துன்பப்பட்டுப் பிள்ளையைப் பெறும் துயரத்தை, பிள்ளை பெறாத மலடி பரிவோடு தெரிந்து கொள்வாளோ? அவள் பிள்ளை பெறும் துன்பத்தை அறிய மாட்டாள். அதுபோல, கற்றறிந்த பெரியவர்களின் பெருமையை, கற்றறிந்த பெரியோரே அறிவர். கற்றறியாத மற்றவரால் அறிந்து கொள்ள முடியாது.
(கனம் - பெருமை. வந்தி - மலடி. பரிவு - இரக்கம்.)