கீழோர் செவியில் அறவுரை ஏறாது

 

 

                                              கீழோர் செவியில்  அறிவுரை ஏறாது
                                                                     ----

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்ம நூல் புக்காலும் தங்காதே---சன்மம் எலும்பு

உண்டு சமிக்கும் நாய், ஊண் ஆவின் நெய்யதனை

உண்டு சமிக்குமோ? ஓது.

நீதி வெண்பா என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள்....

தோலையும் எலும்பையும் உண்டு பசியாறுகின்ற நாயானது, பசு நெய் கலந்த நல்ல உணவினை உண்டு அமையுமோ? நீ சொல். அது போலவே, தீவினையே மிகுந்து, அதன் பயனால் உருவான உடம்பை உடைய கீழ்மக்களின் செவியில் அறநூல் கருத்துக்களை எடுத்துப் புகட்டினாலும் அவர்களிடத்தில் அக் கருத்து தங்குமோ? தங்காது.

கன்மம் --- வினை. இங்குத் தீவினை என்னும் பாவத்தைக் குறித்தது. பூரித்த --- மிகுந்த. தன்ம நூல் --- அறநூல். சன்மம் --- தோல். வடமொழியில் சருமம் எனப்படும். சமிக்கும் --- பசியாறும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 23

  "சடக் கடத்துக்கு இரை தேடிப் பலஉயிர் தம்மைக் கொன்று, விடக் கடித்துக் கொண்டு இறுமாந்து இருந்து, மிகமெலிந்து படக் கடித்தின்று உழல்வார்கள...