53. நன்மையைத் தீமை வெல்லாது

 “சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான், நீள்பொறையை

மெத்திய கோபமது வெல்லாது, - பத்திமிகு

புண்ணியத்தை பாவமது வெல்லாது, போர்அரக்கர்

கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.” -- நீதிவெண்பா.


எப்பொழுதும் போர் செய்கின்ற அரக்கர்கள் கண்ணபிரானை வெல்லுவார்களோ? வெல்லமாட்டார்கள்.  அதுபோல, பொய் மெய்யை வெல்லமாட்டாது. மிகுந்த கோபம் மேலான பொறுமையை வெல்லாது.  அன்புமிக்க நல்வினையைத் தீவினை வெல்லாது.


(சத்தியம் - மெய்.  அசத்தியம் - பொய்.  மெத்திய – மிகுந்த.  பத்தி - அன்பு.)


No comments:

056. கொடுங்கோன்மை - 04ழ கூழும் குடியும்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மேல் விளைவை அறியாமல், ...