“தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்
பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப்
பெற்றாள், இவர்ஐவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.” -- நீதிவெண்பா
பேசுமிடத்து, தன்னை ஈன்றவள், தன் மூத்த சகோதரனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனுக்குரிய மனைவி, தன் மனைவியைப் பெற்றவள் (மாமியார்) ஆகிய இவ் ஐந்து வகையாரையும் எவர்க்கும் பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.
(பன்னி - பத்தினி, மனைவி. நற்றாய் - பெற்றெடுத்த தாய்.)
No comments:
Post a Comment