42. தாயர் ஐவர்

“தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்

பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப்

பெற்றாள், இவர்ஐவர் பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில்.” -- நீதிவெண்பா


பேசுமிடத்து, தன்னை ஈன்றவள், தன் மூத்த சகோதரனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனுக்குரிய மனைவி, தன் மனைவியைப் பெற்றவள் (மாமியார்) ஆகிய இவ் ஐந்து வகையாரையும் எவர்க்கும் பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.


    (பன்னி - பத்தினி, மனைவி.  நற்றாய் - பெற்றெடுத்த தாய்.)


No comments:

பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே, சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே! வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.” இத...