34. ஒழுக்கம் கெட்டால் விழுப்பம் இல்லை

 



“சின்னமெங்கே? கொம்பெங்கே? சிவிகையெங்கே?      

பரியெங்கே? சிவியார் எங்கே?

பின்னைஒரு பாழும்இல்லை! நடக்கைகுலைந்

     தால்உடனே பேயே அன்றோ?

சொன்னவிலும் தண்டலையார் வளநாட்டிற்

     குங்கிலியத் தூபம் காட்டும்

சன்னதமா னதுகுலைந்தாற் கும்பிடெங்கே?

     வம்பர்இது தனையெண் ணாரே!”


இதன் பொருள் —-


சொல் நவிலும் தண்டலையார் வள நாட்டில் - புகழ்பெற்ற திருத்தண்டலை இறைவரின்  வளமிக்க  நாட்டிலே,  நடக்கை  குலைந்தால் - (ஒருவருடைய) ஒழுக்கம் கெட்டால், சின்னம் எங்கே - (வெற்றிச்) சின்னம் எங்கே?, கொம்பு எங்கே - (ஊது) கொம்பு எங்கே?, சிவிகை எங்கே - பல்லக்கு எங்கே?, சிவியார் எங்கே? - பல்லக்குத் தூக்குவோர் எங்கே?, பரி எங்கே - குதிரை எங்கே?, பின்னை ஒரு பாழும் இல்லை - (ஒழுங்கு கெட்ட பிறகு) எந்த மதிப்பும் இராது, உடனே பேயே அன்றோ - உடனே பேய்போலவே ஆய்விடுவர், குங்கிலியத் தூபம் காட்டும் சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே - குங்கிலியப் புகை காட்டும் நன்முயற்சியை விட்டு விட்டால் (கோயிலுக்கு மக்கள் வந்து) கும்பிடுவது இருக்குமா?, வம்பர் இதுதனை எண்ணார் - வீண்பேச்சுக்காரர் நன்னடக்கையைப் பற்றிச் சிந்தியார்.

8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...