ஈனன் அதிகாரியாக வந்தால்

   

😀 ஈனன் ஒருவன் அதிகாரியாக வந்தால் என்ன நிகழும்  😀என்று வேதநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாடல்....

 

ஈனத்திலே பிறந்தோன் இறையாய் வரின், என்றும் மது

பானத்திலே, பரிதானத்திலே, கை பழகிய அவ

மானத்திலே மிகுத்தோர்க்கு அதிகாரம் வழங்கிடுவன்,

ஞானத்திலே சிறந்தோரை எல்லாம் தள்ளி நைவிப்பனே.

 

பொருள்.......

 

மிக்க தாழ்வான குணத்துடன் உள்ள ஒருவன் தலைமை அதிகாரியாக  வந்தால், எப்போதும் மது அருந்துவதிலும், இலஞ்சம் வாங்குவதிலும் தேர்ந்து, அவமானம் செய்வதில் வல்லவர்க்கு அதிகாரம்  வழங்கிடுவான்.  அறிவில் சிறந்தோரை எல்லாம் தள்ளி வைத்துத் துன்புறுத்துவான்.

 

ஈனம்--கீழ்மைக் குணம்.

பரிதானம்-- இலஞ்சம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...