“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகம்உறுதல் நல்லோர் தொழில்.” — நீதிவெண்பா
நல்ல நாக்கானது தன்னோடு இருந்துகொண்டே தனக்கு கேடு விளைவிக்கும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்டே சுவை வகைகளை அனுபவிப்பது போல, பகைவர் பலர் இருந்தாலும், அவர்களிடம் உண்மை அன்பைக் காட்டி, அவர்களின் மூலம் நன்மையை அடைதல் நல்லோர் செயலாகும்.