6. இவையிவை வீண்

“காந்தன் இல்லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்,

சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம், - ஏந்திழையே

அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம், அவமே

துன்எயிறுஇல் லார்ஊண் சுவை.” — நீதிவெண்பா


மணிகளால் இழைக்கப்பட்ட அணிகளை அணிந்தவளே! கணவன் இல்லாத கனத்த கூந்தலை உடைய பெண்ணின் அழகு வீண்.  பொறுமை என்பது இல்லாதவரின் தவம் வீண் ஆகும். தாயில்லாத பிள்ளை இருப்பது வீணே. நெருங்கிய பற்கள் இல்லாதவர்கள் உண்ணும் உணவின் சுவையும் வீணே.


6. இவையிவை வீண்

“காந்தன் இல்லாத கனங்குழலாள் பொற்புஅவமாம், சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம், - ஏந்திழையே அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம், அவமே துன்எயிறுஇல் லா...