6. இவையிவை வீண்

“காந்தன் இல்லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்,

சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம், - ஏந்திழையே

அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம், அவமே

துன்எயிறுஇல் லார்ஊண் சுவை.” — நீதிவெண்பா


மணிகளால் இழைக்கப்பட்ட அணிகளை அணிந்தவளே! கணவன் இல்லாத கனத்த கூந்தலை உடைய பெண்ணின் அழகு வீண்.  பொறுமை என்பது இல்லாதவரின் தவம் வீண் ஆகும். தாயில்லாத பிள்ளை இருப்பது வீணே. நெருங்கிய பற்கள் இல்லாதவர்கள் உண்ணும் உணவின் சுவையும் வீணே.


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...