040. கல்வி --- 01. கற்க கசடற

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     அதாவதுமாட்சிமை பொருந்திய அரசன் ஒருவன்கல்வி அறிவு உடையவனாய் இருத்தல் வேண்டும். ஆதலால்அவன் கற்பதற்கு உரிய நூல்களைக் கற்றல் வேண்டும் என்பது இதில் கூறப்பட்டது. அவன் கற்க வேண்டியவை அறத்தையும்நீதியையும் போதிக்கின்ற நூல்களும்படைக்கலம் பயிற்றுதலும் ஆகும். அரசன் ஆறிவு உடையவனாக இருந்தால்அவனுக்கு மட்டுமல்லாது அவன் ஆணைக்கு உட்பட்ட மக்கள் அனைவருக்கும் பயன் தரும். 

 

     அரசனுக்கு கல்வியானது சிறப்பைத் தரும் என்றாலும்,உலகத்து உள்ள உயிர்கள் எல்லாம் கல்வி ஒன்றினாலேயேதாம் அடையவேண்டிய உறுதிப் பயன்களை அடைதல் கூடும் என்பதால்இக் கல்வி என்னும் அதிகாரம் எல்லோருக்கும் பொதுப்படக் கூறியதாகும்.

 

     தலைமைப் பண்புகளை உடையவராய் இருந்துமற்றவர்களை வழி நடத்தக் கல்வி அறிவு இன்றியமையாதது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவன் கற்கவேண்டிய நூல்களைக் கற்வேண்டும்கற்பனவற்றைக் குற்றம் நீங்கக் கற்கவேண்டும்அவ்வாறு கற்றுத் தேர்ந்தபின்அதற்குத் தகுந்தவாறு ஒழுகுதல் வேண்டும்" என்றார் நாயனார்.

 

     அதாவதுஅறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றிசிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும்பல,நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால்சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின்கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்துபிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்கும் காலத்தில்நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும்இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கிஉண்மைப் பொருளை உணர்ந்துஉணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால்,உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். 

 

     கற்ற வழியில் நிற்றல் என்பதுஇல்லறத்தில் வழுவாது நின்றுமனைவியோடு போகம் புசித்துகெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கிதுறவறத்தில் நின்றவரானால்தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்துஅவா அறுத்துசிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.

 

     இதனால்கல்வி என்பது தலைமைப் பொறுப்பில் உள்ள அரசனுக்கு மட்டுமல்லாதுமக்கள் அனைவரும் கற்கவேண்டிய நூல்களைக் கற்கவேண்டும் என்பதும்கற்கும் முறை இது என்பதும்முறைப்படி கற்ற பின்னர் ஒழுகும் முறை இது என்பதும் அறிவிக்கப்பட்டது.

 

     கல்வி என்பதைஅறிவுக்கல்விதொழிற்கல்விஆன்மீகக்கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனையும் தரும் நூல்களைப் பயிலுதல் வேண்டும் என்பது பின்வரும் பெரியபுராணப் பாடல்களால் தெளியப்படும்.

 

தவம்முயன்று அரிதில் பெற்ற

            தனிஇளங் குமரன்,நாளும்

சிவம்முயன்று அடையும் தெய்வக்

            கலைபல திருந்த ஓதி,

கவனவாம் புரவி யானை

            தேர்படைத் தொழில்கள் கற்றுப்

பவம் முயன்றதுவும் பேறே

            எனவரும் பண்பின் மிக்கான்.

 

இதன் பொருள் ---

 

     சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து,  மனுநீதிச் சோழன் அருமையாகப் பெற்ற மிக இளைஞனாகிய அந்த மகன்நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதியும்விரைவோடு பாய்கின்ற குதிரை ஏற்றமும்யானை ஏற்றமும்தேர் இயக்கலும்படைக்கலப் பயிற்சியும் பெற்றுவேண்டத்தகாத மானுடப் பிறவியும் இவனளவில் ஒரு பெரும் பேறே ஆயிற்று என யாவரும் சொல்லும்படியான நற்குணங்களால் மேம்பட்டு விளங்கினான்.

 

     இப் பாடலில், "சிவம் முயன்று அடையுத் தெய்வக் கலை பல திருந்த ஓதி" என்னும் சொற்றொடரும், "பவம் முயன்றதுவும் பேறே" என்னும் சொற்றொடரும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை ஆகும்.

 

உள்ளம் நிறை கலைத்துறைகள் 

     ஒழிவு இன்றிப் பயின்றவற்றால்

தெள்ளிவடித்து அறிந்தபொருள் 

     சிவன்கழலில் செறிவு என்றே

கொள்ளும் உணர்வினில்முன்னே 

     கூற்று உதைத்த கழற்கு அன்பு

பள்ள மடையாய் என்றும் 

     பயின்றுவரும் பண்புடையார்.

 

இதன்பொருள் ---

 

      (சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார்)தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, `அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவதுசிவனடிகளில் பொருந்திய அன்புடைமையான ஒழுக்கமே ஆகும்என்று கொள்ளும் உணர்வினால் முதன்மை பெற,இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கமானதுபள்ள மடையில் நீர் ஓடுவது போல்தடையில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பை உடையவரானார்.

 

     மக்கள் பிறப்பு சில்நாள்பல்பிணிசிற்றறிவு உடையவை என்பதால்,அவர் எவ்வாறு கற்றல் வேண்டும் என்பதுபின்வரும் நாலடியார் பாடல்களால் தெளியப்படும்.

 

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே,நீர் ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து.        

 

இதன் பொருள் ---

 

     கல்வி கரை இல --- கல்விகள் அளவில்லாதனகற்பவர் நாள் சில --- ஆனால்கற்பவருடைய வாழ்நாட்களோ சில ஆகும்மெல்ல நினைக்கின் பிணி பல --- சற்று அமைதியாக நினைத்துப் பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாய் இருக்கின்றனதெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்ப,நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து --- நீர் நீங்கப் பாலை உண்ணும் பறவையைப் போல,அறிஞர்கள் பொருத்தம் உடைய நூல்களைத் தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ள ஆராய்ந்து கற்பார்கள்.

 

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம்,- கலகல

கூஉந் துணை அல்லால்,கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்.

 

இதன் பொருள் ---

 

     அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவது எல்லாம் --- அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பதுகலகல கூம் துணையல்லால் --- கலகல என்று இரையும் அவ்வளவே அல்லால்கொண்டு தடுமாற்றம் போம் துணை அறிவார் இல் --- அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை.

 

     "இற்றைநாள் கற்றதும் கேட்டதும்போக்கிலே போகவிட்டுப்பொய் உலகன் ஆயினேன்நாயினும் கடையான புன்மையேன்"என்றும், "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும்.

 

இருக்கு ஆதி மறைமுடிவும்,சிவாகமம் ஆதி

     இதயமும் கைகாட்டு எனவே,இதயத்து உள்ளே

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான்

     ஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்.

 

இதன் பொருள் ---

 

     மந்திரங்களைத் தன்னகத்தே உடைய மறைகளின் முடிவும்சிவ வழிபாட்டினைத் தன்னகத்தே உடைய சிவாகமம் முதலியவற்றின் உள்ளுறைக் கருத்தும் அறிவு அடையாளத் திருக்கைக் காட்டு எனவே,திருவருளால் ஒருமுறை தங்கள் உள்ளத்தின்கண் தெளிந்த நல்லார் தமக்கு எப்போதும் நீங்காத சிவப்பேரின்பப் பெருக்கு விளையா நிற்கும்.

 

     கற்றவழி நிற்றலின் பயன் பின்வரும் தாயுமான அடிகளார் பாடல்களால் கூறப்பட்டது.

 

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்கு ஆக?

     கடபடம் என்று உருட்டுதற்கோ?கல்லால் எம்மான்

குற்றம் அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு

     குணம் குறி அற்று இன்பநிட்டை கூட அன்றோ?

 

இதன் பொருள் ---

 

     மெய்யுணர்வு நூல்களாகிய ஞான நூல்களைக் கற்றலும் நல்லார் வாயிலாகத் தெளியக் கேட்டலும் எதன் பொருட்டென்று நன்கு ஆராயின்,ஆருயிர்களின் உய்வின் பொருட்டே ஆம். பிறரொடு சொற்போராகிய கடம்படம் என்று உருட்டும் தர்க்கம் புரிவதற்கோகல்லாலின் நீழலில் எழுந்தருளும் எம்மான் ஆணவமலக் குற்றமும் அதனால் வரும் இருவினையும் வினையால் ஏற்படும் பிறப்பும்பிறப்பின் நிலைக்களமாகிய மாயையும் அறவே நீங்கும் பொருட்டு அறிவடையாளம் எனப்படும் சின்முத்திரை வடிவமாகத் திருக்கை காட்டி அருளினன். திருவருளால் அத் திருக்குறிப்பினை உணர்ந்து மாயாகாரியக் குணங்குறிகள் நீங்கிய சிவத்தொடுங் கூடி,ஒடுங்கும் சிவயோக நிட்டையினைப் பெற்று இன்புறுதற்கு அன்றோ?

 

ஒன்றி ஒன்றி நின்றும் நின்றும் என்னை என்னை

     உன்னி உன்னும் பொருள் அலைநீ,உன்பால் அன்பால்

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன்,

     நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே

என்றும் என்றும் இந்நெறியோர் குணமும் இல்லை,

     இடுக்குவார் கைப்பிள்ளை,ஏதோ ஏதோ

கன்றுமனத்துடன் ஆடு தழைதின்றாற்போல்

     கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே.

 

இதன் பொருள் ---

 

     உலகியலில் காணப்படும் நூல்களில் ஒவ்வொரு நூலிலும் அழுந்தி அழுந்தி,அதன்படி ஒழுகி நிற்பதாலும் கண்டபயன் ஏதுமில்லை.அடியேன் என்னை மறவாது என்னை நினைந்து கொண்டே உன்னையும் நினையும் பொருளாக நீ யாண்டும் காணப்படும் பொருளாக உள்ளவன் அல்லை. உன்பால் நாயன்மார் போன்று மிக்க பத்தியினால் அடியேன் உறைத்து நின்று ஒழுகி அத் தன்மையைக் கண்டவர் கனிந்து இரங்கும் படிக்கு உள்ள அவாவற்ற நிலைமையுடைய வைராக்கியனும் அல்லேன்.

 

            அடியேன்உலகியல் வழிகளில் நின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். ஆனால்இந்த முழுப் பொய்யனாகிய இந் நீலனுக்கேஎந்தக் காலத்திலும் இவ்வுலகியல் நெறியால் அடையும் நன்மைக் குணம் ஒரு சிறிதும் இல்லை. மிக்க அன்பும் அமைதியும் உள்ள கைக்குழந்தைகளைக் கண்டவர் அனைவரும் மிக்க விருப்பம் கொண்டு எடுத்து ஒக்கலில் வைப்பர். அத்தகையஇடுக்குவார் கைப்பிள்ளையாக இருக்கும் அன்புத் தன்மையும் அடியேன்பால் அமையவில்லைவருந்திய மனத்துடன் ஆடு தழை தின்னும் தன்மைபோல் ஒருவரிடத்தே முற்றும் கற்கும் நிலைமையன் அல்லனாய்,அரைகுறையாகக் கற்றலும்செவிச் செல்வமாகிய அரும்பெருங் கேள்வியினைக் கேட்டல் இல்லாமையுமாகிய குறைபாடு உடையனாய் மனக்கலக்கத்தை அடைந்தேன்.

 

     ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாதுசெடிதோறும் போய் மேய்தல் அதன் இயல்பு. இது கடை மாணாக்கர்க்கு ஒப்பு.

 

            அன்னம் ஆவே மண்ணொடு கிளியே

            இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி

            அன்னர் தலையிடை கடைமாணாக்கர்.

 

என்னும் நன்னூல் சூத்திரம் காண்க.

 

    பெரும் பொய்யினைச் சிறிதும் அஞ்சாது கூறி அதனை நிலைநாட்டி நிற்கும் பெண்ணை நீலியென உலகில் வழங்குவர். அம்முறையில் உள்ள ஆண்பாலைக் குறிக்க நீலன் என்னும்சொல் ஈண்டுக் கூறப்பட்டுள்ளது.

 

உற்றதுணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று

     உன்னேன்பன்னாள் உலகத்து ஓடி ஆடிக்

கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும்,

     கற்பதும் கேட்பதும் அமையும்,காணா நீத

நல்துணையே! அருள்தாயே! இன்பமான

     நாதாந்த பரம்பொருளே! நாரண ஆதி

சுற்றமுமாய் நல்லன்பர் தமைச் சேயாகத்

     தொழும்புகொளும் கனாகனமே சோதிக் குன்றே!

 

இதன் பொருள் ---

 

     எவ்விடத்தும் விட்டு நீங்காது ஒட்டி உறுகின்ற பெருந்துணையாகிய உன்னை அல்லாமல் பற்றும் புகலிடமாக வேறொன்றையும் நினைத்தல் செய்யேன்பலநாளும் பலர் இடத்தும் இவ்வுலகத்தே ஓடியும் அலைந்து ஆடியும் உறுதியாகக் கற்றதும் கேட்டதும் நீயே மெய்ப்புகல் என்னும் உண்மை உணர்வதனுக்குக் காரணமாகும். அதனால் இனிமேல் கற்கவேண்டுவதும் கேட்க வேண்டுவதும் ஏதும் இன்மையால் போதுமானது என்பதாம். உனது திருவருளால் அன்றி வேறு எவ்வகையானும் காண்டற்கு அரிய பாக்கியப் பொருளே! சிறந்த துணையே! நிறையருள் புரியும் குறைவில் தாயே! நீங்காப் பேரின்பமான முப்பத்தாறாம் மெய்யாம் நாதங்கடந்த பரம்பொருளே! நாரணன் முதலாச் சொல்லப்படும் நின் திருவாணை பெற்றுத் தேவர்களாய்த் தொழில் புரியும் சிற்றுயிர்களைப் பரிவாரங்களாகிய சுற்றமாகவும்ஏனைப் பத்தி மிகுந்த நிலவுலகத்து மெய்யடியார்களைத் திருவடியினைத் தழுவும் தன்மையுடைய மக்களாகவுங் கொண்டு அவரவர்கள் புரியும் திருத்தொண்டுகளை ஏற்றுக் கொண்டருளும் நனிமிகு கனமுடைய இயற்கைப் பேரொளிப் பெருமலையே!

 

நில்லாத ஆக்கைநிலை அன்றுஎனவே கண்டாய்,

     நேயஅருள் மெய்யன்றோநிலயமதா நிற்கக்

கல்லாதே ஏன் படித்தாய்கற்றதெல்லாம் மூடம்

     கற்றதெல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று,

சொல்லாலே பயனில்லைசொல்முடிவைத் தானே

     தொடர்ந்துபிடிமர்க்கடம்போல் தொட்டது பற்றாநில்,

எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண்டடிநீ,,

     இராப்பகல் இல்லாஇடமே எமக்குஇடம் என்று அறிந்தே.

 

இதன் பொருள் ---

 

     மாயாகாரியப் பொருளாகிய இவ்வுடம்பு நிலைத்து நிற்கும் தன்மை உடையது அன்று என்னும் மெய்ம்மையினைக் கண்கூடாகக் கண்டனை. அனைத்து உயிர்களிடத்தும் நீங்கா அருள் கொண்டு நிலைத்து நிற்பது சிவன் திருவருள் ஆற்றல் ஒன்றேயாம்அத் திருவருளை நிலைத்த புகலிடமாக உறைத்து நிற்க நீ கற்றுக்கொள்ளாமல்வேறுபல பயனில் நூல்களை நீ எதன் பொருட்டுக் கற்று நின்றனைஅங்ஙனம் கற்றது எல்லாம் அறியாமையாக முடிந்தது.  அவ்வுண்மையினை நீயும் கண்டனை அல்லவாமாற்றம் மனங்கழிய நின்ற மறையோனாகிய சிவனை மாற்றமாகிய இவன் என்னும் சுட்டுச் சொல்லால் சொல்வதனால் ஏற்படும் பயன் ஏதும் இல்லை. சொல் இறந்து நிற்பதாகிய சொல் முடிவாம் பெருவெளியினைத் திருவருளால் பற்றுஅதனைத் தொடர்ந்து குரங்குப் பிடி போன்று விடாது தொட்டதனையே கடைப்பிடியாகப் பற்றி நில்இவ்வுண்மையினை எல்லாரும் அறிந்து உய்யும்படி நீ வாய்ப்பறையாக அறைந்து விளம்புவாயாக. இரவு பகல் எனப்படும் மறப்பும் நினைப்பும் இல்லாத திருவடிச் சிறப்பே புகலிடமாகும் என்று அறிவாயாக.

 

 

பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே!

     பெருகிய கருணை வாரிதியே!

நற்றவத் துணையே! ஆனந்தக் கடலே!

      ஞாதுரு ஞானஞே யங்கள்

அற்றவர்க்கு அறாத நட்புடைக் கலப்பே!

      அநேகமாய் நின்னடிக்கு அன்பு

கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னைக்

      கண்டிடும் பொருட்டு அன்றோ காணே.

 

இதன் பொருள் ---

 

     திருவருளால் மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் பெற்று இன்புறும் பெரிய தவக்குன்றே!வற்றாது பெருகிக் கொண்டேயிருக்குங் கருணைக்கடலேநற்றவத்தோருக்கு உற்ற நற்றுணையேபேரின்பப் பெருங்கடலேமெய்ப்புணர்ப்பு எய்தாது வேறு நிற்பார் காணும்காண்பான்காட்சிகாட்சிப்பொருள் என்னும் மூவகை மருள் நிலையற்றுத் தெருள்நிலையுற்ற மூதறிவாளர்க்கு அறாத நட்புடைப் புணர்பொருளேமிகுதியாக நின் திருவடியில் கூட்டுவிக்கும் அன்பு உண்டாகும்படி மெய்ந்நூல்களைக் காதலுடன் கற்றலும்கற்றார்பால் சென்று கேட்டலும் நின் திருவடியினைத் திருவருளால் உணர்விற்கு உணர்வாய்க் காண்டல் பொருட்டேயாம். 

 

கற்றும்,பலபல கேள்விகள் கேட்டும்,கறங்கு எனவே

சுற்றும் தொழில்கற்றுச் சிற்றின்பத்து ஊடு சுழலின் என்னாம்?

குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே

முற்றும் துணைஎன நம்பு கண்டாய்சுத்த மூடநெஞ்சே!

 

இன் பொருள் ---

 

     மிகவும் அறியாமையால் பற்றப்பட்டு மூடம் பொருந்திய நெஞ்சமேபலபல நூல்களைக் கற்றும் செவிச்செல்வம் ஆகிய பல கேள்விகளைக் கேட்டும் உள்ளம் ஒருநிலைப்படாது காற்றாடி போன்று சுற்றி உழலும் தொழிலால் நீ அடையும் பயன் யாதுசிற்றின்பத்துடன் சுழன்றுகொண்டு இருப்பதனால் பிறவித் துன்பமே அன்றி,பிறவாப் பேரின்பம் வாய்க்குமோகுற்றம் சுருங்கிச் செயலற்றுக் குணமே மிகுந்து மேலிட்டு வழுவாது ஒழுகும் மெய்யன்பர் திருக்கூட்டத்தையே உற்ற துணை என நம்புவாயாக. 

 

 

இனிதிருக்குறளைக் காண்போம்...

 

கற்க கசடு அறக் கற்பவைகற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கற்பவை கசடு அறக் கற்க--- ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க,

 

     கற்றபின் அதற்குத் தக நிற்க--- அங்ஙனம் கற்றால்அக் கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.

            

            ('கற்பவைஎன்றதனான்அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவனசின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக்

 

கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்

தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே

முட்டுஇன்றி மூன்று முடியுமேல் அஃதுஎன்ப

பட்டினம் பெற்ற கலம்.                 --- நாலடியார்.

 

இதன் பதவுரை ---

 

     கருமமும் உட்படா போகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா --- பொருள் வரவுக்கு ஏதுவான தொழில் முயற்சியினும் ஈடுபட்டுஅதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந் துய்த்துமறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கே அறமும் செய்து,ஒரு நிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல் --- இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற் கடைசி வரையில் தடையின்றி நிறைவேறுமாயின்அஃது பட்டினம் பெற்ற கலம் என்ப --- அப்பேறுதன் பட்டினத்தை மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலை ஒக்கும் என்று அறிஞர் கூறுவர்.

 

   துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து,அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம்அவனால் கற்கப்படும் நூல்களும்அவற்றைக் கற்குமாறும்கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

அருகர் கழு ஏறுதலால் அந்நெறி விட்டு ஈசர்

திருவருளால் வாதவூர் சேரும் --- குருநெறியில்

கற்க கசடு அறக் கற்பவை,கற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

            அருகர் --- சமணர். அல் நெறி --- சித்தாந்த நெறி அல்லாத புறச்சமய நெறி. வாதவூர் சேரும் குரு --- மணிவாசகர். இவர் கற்றவை சிவஞானபோதம் முதலிய சைவ நூல்கள்.

 

     சமண ணமயத்தைப் பற்றி இருந்த துறவிகள்அச் சமயநெறியில் ஒழுகாமையால்அரச தண்டத்திற்கு ஆளாகி கழுவில் ஏறி மாய்ந்தார்கள். சைவசித்தாந்த நூல்களைப் பழுது அற ஓதியதன் பயனாக,இறைவனே குருவாக வந்து ஆட்கொள்ளப் பெற்ற மணிவாசகப் பெருமான் குருநெறியில் நின்று வீடுபேற்றை அடைந்தார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்துசென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

 

பார்க்கவன்பால் கல்வி பயின்றகயன் பார்க்கவன்நோய்

தீர்க்கவரம் பெற்றான், சிவசிவா! - ஏற்கநன்றாக

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

            பார்க்கவன் --- வெள்ளி. கசன் என்ற சொல் கயன் என ஆயிற்று. கசன் --- வியாழன் மகன். 

 

     முன்னொரு காலத்தில் பாற்கடலில் அமுதம் கடையப்பட்டு அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் அமுதத்தை பருகிவிட்டார்கள். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. போரில் பல பலசாலிகளான அரக்கர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி போரில் இறந்து போனான். பார்க்கவராகிய சுக்கிராசாரியார் (அரக்க குரு) இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார். அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ளசுக்கிரர் சஞ்சீவினி வித்தையை பயன்படுத்தி அசுரத் தலைவன் பலியை பிழைக்கச்செய்து விட்டார்.

 

     இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி வித்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுருவிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக இருந்து குரு சேவை செய்து அந்த வித்தையை கற்றுக்கொண்டு வரட்டும் என்றார். தேவர்களின் திட்டப்படி கசன் சுக்கிராசாரியாரிடம் வந்து கூறினான்.

 

     பகவானே நான் பிரகஸ்பதியின் புதல்வன். பலவித சாஸ்திரங்களை கற்றவர்ஆயினும் கற்க வேண்டிய கல்விக்கோ எல்லையே இல்லை. முற்றிலும் கற்றவர் எவரும் இல்லை. நான் தங்களிடம் விசேட வித்தையை கற்க வந்திருக்கிறேன். கற்பதில் ஆர்வம் கொண்ட மாணவனை நல்லாசிரியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். தங்கள் மாணாக்கனாக சேர்ந்து நான் குரு சேவை செய்ய விரும்புகிறேன். தாங்கள் மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று சுக்கிராச்சாரியாரை சரண் அடைந்தான். சுக்கிராசாரியார் அப்படியே ஆகட்டும் என்று அவனைச் சீடனாக ஏற்றுக்கொண்டார். கசன் குருவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். காட்டிற்குச் சென்று மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவான்.         

 

     கசன் சீடனாகச் சேர்ந்த செய்தியை அசுரர்கள் அறிந்து கொண்டனர். அசுரகுலத்திற்கு ஆபத்து வரும் என்று நினைத்தனர். ஒருநாள் அவர்கள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த கசனை கண்டம் துண்டமாக வெட்டிப்போட்டனர். சுக்கிரரின் மகள் தேவயானி கசன் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தாள். அவன் தந்தையிடம் கூறினாள். காட்டிற்கு சென்ற தங்கள் சிஷ்யன் கசன் திரும்பவில்லையே. அவன் ஆபத்தில் சிக்கிக்கொண்டான் போலும்என்றாள். சுக்கிரர் ஞானதிருஷ்டியில் அனைத்தையும் அறிந்து சஞ்சீவினி வித்தையை உபயோகித்து கசனை பிழைக்க வைத்து விட்டார்.

 

     சமித்துகளை சேகரிக்கமாடுகளை மேய்க்கவிறகு வெட்டபழங்கள் பறிக்கஅல்லது பூஜைக்கு மலர்கள் கொண்டு வர காட்டிற்குச் சென்ற போது ஒவ்வொரு முறையும் கசனை அரக்கர்கள் கொன்றனர். கசன் மீது வைத்த காதலால் தேவயானி கசன் திரும்பவில்லை என்று அழுவாள். சுக்கிராசரியார் மகள் மீது இருந்த பாசத்தினால் ஒவ்வொரு முறையும் சஞ்சீவினி வித்தையை கொண்டு கசனை பிழைக்க வைத்துக்கொண்டு இருந்தார். இறுதியில் ஒருநாள் கசன் காட்டிற்கு சென்றிருந்தபோது அவனை வெட்டி அசுரர்கள் தீயிட்டு எரித்தார்கள். அந்த சாம்பலை எடுத்து வந்து சுக்கிரருக்கு தெரியாமல் மதுவில் கலந்து கொடுத்து விட்டனர். சுக்கிரரும் அதைக் குடித்து விட்டார். தேவயானி வழக்கம் போல் கசனை நினைத்து அழுதாள். அவர் சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க மதுவுடன் கலந்த சாம்பலுடன் வயிற்றில் சென்ற கசன் பேசினான். குரு நான் இங்கு உமது வயிற்றில் உயிர் பெற்று இருக்கிறேன். நான் வெளியில் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தால் தாங்கள் இறந்து விடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்என்றான்.

 

     சுக்கிராசாரியார் வேறு வழியின்றி வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். கசன் சுக்கிரர் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தான். கசன் இறந்து போன சுக்கிரரை குறித்தும் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தான். சுக்கிரர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.

 

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்

கற்கின்ற செய்மின்,கழிந்து அறும் பாவங்கள்,

சொல்குன்றல் இன்றித் தொழுமின்,தொழுதபின்

மற்று ஒன்று இலாத மணிவிளக்கு ஆமே. --- திருமந்திரம்.

 

இதன்பொழிப்புரை ---

 

     இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்;அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்;பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்வணங்கினால் அவைதன்னை ஆக்குதற்கும்தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்களுக்கு உதவுவன ஆகும்.

 

     வினைமாசினை அறுக்கும் திருவடிக் கல்வியை,

 

"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் (ஆகிய)

உவமையிலாக் கலைஞானம்`"

 

எனவும்

 

     இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைதலாகிய அனுபவத்தைஅதே பாட்டில்,

 

"பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் (ஆகிய) உணர்வரிய மெய்ஞ்ஞானம்

 

எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க.

 

சொல் --- சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்என்றல் அறிக. குன்றல் --- பயனின்றிக் கெடுதல்.

 

 

கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்,

பல்லி உடையார் பரம்பரிந்து உண்கின்றார்,

எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.  --- திருமந்திரம்.

 

இதன்பொழிப்புரை---

 

     கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்து ஒழிகின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால்கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

 

 

நற்குணம் உடைய வேந்தை 

     நயந்து சேவித்தல் ஒன்று;

பொற்புடை மகளிரோடு 

     பொருந்தியே வாழ்தல் ஒன்று;

பற்பலரோடு நன்னூல் 

     பகர்ந்து வாசித்தல் ஒன்று;

சொல்பெறும் இவைகள் மூன்றும் 

     இம்மையில் சுவர்க்கமாமே ---  விவேகசிந்தாமணி.

 

இதன் பொருள் ----

 

     நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று--- நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பிஅவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்,பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று--- நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டுஅவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும்,பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று--- பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்துஅந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும், சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே ---புகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில்சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

 

     விளக்கம்--- உடம்பை விட்டபின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிரதுன்பம் என்பது சிறிதும் இல்லை.  அத்தகைய இன்பத்தைஇப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும்.

 

 

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிதில்லை --- அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.          ---  அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     எப்பிறப்பு ஆயினும் --- வேறு எந்தப் பிறப்பானாலும்மக்கட்பிறப்பின் --- மக்கட் பிறப்பினைப் போலஒருவற்கு ---ஒருவனுக்குஏமாப்பு --- இன்பம் செய்வதுபிறிது இல்லை--- வேறு ஒன்று இல்லைஅப்பிறப்பில் --- அம் மக்கட் பிறப்பில்கற்றலும் --- கற்றற்கு உரியவற்றைக் கற்றலும்கற்றவை கேட்டலும் --- கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும்கேட்டதன்கண் நிற்றலும் --- கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும்கூடப்பெறின் --- கூடப் பெற்றால்.

 

 

தேசுந் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து

மாசு மனத்தகத்து இல்லாமை --- ஆசு இன்றிக்

கற்றல்,கடன் அறிதல்,கற்றார் இனத்தராய்

நிற்றல் வரைத்தே நெறி.          --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     தேசும் --- கீர்த்தியும்திறன் அறிந்த திட்பமும் --- நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய்தேர்ந்து உணர்ந்து --- மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்துமனத்தகத்து மாசு இல்லாமை --- மனத்திடைக் குற்றமில்லாமல்ஆசு இன்றிக் கற்றல் --- மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும்கடன் அறிதல் --- தனது கடமையை அறிதலும்கற்றார் இனத்தராய் நிற்றல் --- கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகியவரைத்தே நெறி --- எல்லையினை உடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

 

கற்றாங்கு அறிந்துஅடங்கிதீதுஒரீஇநன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றிபணிஅறநின்றுஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச் சென றார்.   ---  நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்று ஆங்கு அறிந்து --- அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்துஅடங்கி --- அவற்றிற்கேற்ப அடக்கமாய்தீது ஒரீஇ --- (அந் நூல்களில் விலக்கிய) தீயகாரியங்களைக் கைவிட்டுநன்று ஆற்றி --- (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்துபெற்றது கொண்டு மனம் திருத்தி --- கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்திபற்றுவதே பற்றுவதே பற்றி --- தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்திற் கொண்டுபணி அற நின்று --- சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்றுஒன்று உணர்ந்து --- தனிப்பொருளாகிய இறைவனை அறிந்துநிற்பாரே --- நிற்கின்ற ஞானியரேநீள்நெறி சென்றார் --- வீட்டையும் வழியில் நின்றவராவர்.

 

கல்விக்கு அழகு கசடு அற மொழிதல் --- நறுந்தொகை.

 

இதன் பொருள் ---

 

            ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல்.

 

            கசடுஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும்திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...