18. பிள்ளை பெற்றவர் தம்மைப் பார்த்து....



"அள்ளித்தெண் ணீறணியும் தண்டலையார்

      வளநாட்டில் ஆண்மை யுள்ளோர்,

விள்ளுற்ற கல்வியுள்ளோர், செல்வமுள்ளோர்,

      அழகுடையோர் மேன்மை நோக்கி

உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை

      எனவுரைத்திங் குழல்வார் எல்லாம்

பிள்ளைபெற் றவர்தமைப் பார்த் திருந்துபெரு

      மூச்செறியும் பெற்றி யாரே."


இதன் பொருள் ---

தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில் - தூய திருநீற்றை எடுத்து த் திருமேனி முழுதும் அணிகின்ற திருத் தண்டலை இறைவரின் வளமுடைய  நாட்டில், ஆண்மை உள்ளோர் - வீரம் உடையோர், விள்ளுற்ற கல்வி உள்ளோர் - விளக்கிக் கூறப்படும் கல்வி கற்றோர், செல்வம் உள்ளோர் - செல்வம் உடையோர், அழகு உடையோர் - வனப்பு உள்ளவர் (ஆகியவரின்), மேன்மை நோக்கி - உயர்வைப் பார்த்து, நமக்கு இல்லை என உள்ளத்தில் அழன்று இங்கு உழல்வார் எல்லாம் - நமக்கு இவை கிடைக்கவில்லையே என்று மனத்தில் வெதும்பி வெதும்பித் திரிபவர்கள் எல்லோரும், பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து - பிள்ளை பெற்றவர்களை நோக்கி, இருந்து பெருமூச்சு எறியும் பெற்றியார் - அமர்ந்து பெருமூச்சு விடும் தன்மை உள்ளவர்.


No comments:

Post a Comment

35. துறவிக்கு வேந்தன் துரும்பு

“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்      பொன்னிவளம் செழித்த நாட்டில், குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்      களும்பொருளாக் குறித்தி டாமல்...