உலகநீதி - 11

 

 "அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்;

    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்,

தஞ்சமுடன் வண்ணான், நாவிதன்றன் கூலி,

    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி,

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி,

    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி,

இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை

    ஏதேது செய்வானோ ஏமன் றானே."


பதவுரை ---

அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கொடுக்காமல் வைத்த இருக்க வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ கேளாய் - நீ கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவு தனை (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

விளக்கம் --

வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள்.


No comments:

Post a Comment

உலகநீதி - 12

  "கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;     கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்; தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;     துர்ச்சன...