“பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன்வேறு கூறில் பொறையும், - அறவினையைக்
காரண்மை போல ஒழுகுதலும், இம்மூன்றும்
ஊராண்மை என்னுஞ் செருக்கு.” -- திரிகடுகம்.
மற்றவர் தன்னை விரும்பி உயர்த்திப் பேசும்போது நாணம் கொள்ளுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழும்போது வெகுளாமல் பொறுத்துக் கொள்ளுதலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும்.
பிறர் ஒருவர் தன்னை உயர்த்திப் பேசும்பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழ்ந்தபோது கோபம் கொள்ளாமல் பொறுமை காத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவிசெய்தலும் சிறந்த செல்வமாகும்.
No comments:
Post a Comment