“படைதனக்கு யானை வனப்பாகும், பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம், - நடைதனக்குக்
கோடா மொழிவனப்பு, கோற்குஅதுவே, சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.
நால்வகைப் படைக்கு, யானைப் படையே அழகாகும். பெண்ணினுடைய இடைக்கு நுண்மை அழகாகும். ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு நடுநிலை தவறாத சொல்லே அழகாகும். செங்கோலுக்கும் அந்தக் கோடாத மொழியே அழகாகும். போர் வீரர்க்கு, கெடாத வீரமானது, அழகாகும்.
No comments:
Post a Comment