மூலம் 6

“படைதனக்கு யானை வனப்பாகும், பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாம், - நடைதனக்குக்

கோடா மொழிவனப்பு, கோற்குஅதுவே, சேவகர்க்கு

வாடாத வன்கண் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


    நால்வகைப் படைக்கு, யானைப் படையே அழகாகும். பெண்ணினுடைய இடைக்கு நுண்மை அழகாகும். ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு  நடுநிலை தவறாத சொல்லே அழகாகும். செங்கோலுக்கும் அந்தக் கோடாத மொழியே அழகாகும். போர் வீரர்க்கு, கெடாத வீரமானது, அழகாகும்.


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...