பாடல்
எண். 57
மண்டலத்தோர்கள்
செய்த
பாவம் மன்னவரைச் சேரும்,
திண்திறல்
மன்னர் செய்த
தீங்கு மந்திரியைச் சேரும்,
தொண்டர்கள்
செய்த தோடம்
தொடர்ந்து தம் குருவைச் சேரும்,
கண்டுஅன
மொழியாள் செய்த
கன்மமும் கணவர்க்கு ஆமே.
இதன்
பொருள் ---
மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும் --- மண்ணுலகில் வாழ்வார்கள்
செய்கின்ற பாவமானது, அவர்களை ஆளுகின்ற மன்னவனையே சாரும்.
திண்திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சேரும் --- வலிமையும் வெற்றியும்
பொருந்திய செய்த தீவினையானது, நன்மை தீமைகளை ஆராய்ந்து மன்னனைச் செங்கோல்
செலுத்தும் முறையில் நடத்தாத அமைச்சரையே சாரும்.
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச்
சேரும் --- அடியார்கள்
செய்யும் குற்றமானது, அவர்களை வழி நடத்தி வரும் குருவையே சேரும்.
கண்டுஅன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே
--- (கணவனாய்
இருப்பவனுக்குத் தான் செய்த பாவத்தோடு,) கற்கண்டை
ஒத்த மொழியை உடைய மனைவி செய்த பாவமும் அவளின் கணவனையே சாரும்.
No comments:
Post a Comment