நரகம் உறுதி





தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்.

இதன் பொருள் ---

     தந்தை உரை தட்டினவன் --- தந்தையின் சொல்லை மறுத்து, அதற்கு மாறாக நடந்தவன்,

      தாய் உரை இகழ்ந்தோன் --- தாயார் கூறும் அறிவுரைகளை அவமதித்து நடந்தவன்,

     அந்தம் உறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன் --- அழகு பொருந்திய குருநாரின் கட்டளையை மறந்தவன்,

     சந்தம் உறு வேத நெறி தாண்டின இந்நால்வர் --- சந்தசுக்களோடு கூடிய வேதங்களிலே சொல்லப்பட்ட நன்னெறிகளைக் கடந்தவன், ஆகிய இந்த நால் வகையானவர்களும்,

     செந்தழலின் வாயின் இடைச் சேர்வது மெய் கண்டீர் --- சிவந்த நெருப்பு வடிவமான நரகத்தினை அடைவது உண்மையாகும் என்பதை அறிந்து கொள்வீர்.


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...