041. கல்லாமை --- 08. நல்லார்கண் பட்ட

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "கற்றறிவு உடைய சான்றோரிடத்து உண்டான வறுமையைக் காட்டிலும்நூல்களைக் கல்லாத கடையரிடம் உண்டான செல்வம் துன்பமானதே" என்கின்றார் நாயனார்.

 

     செல்வம் கற்றாரிடத்து நிற்கவேண்டும். தரித்திரம் கல்லாதவரிடத்து நிற்கவேண்டும். இரண்டுமே மாறுபட்டு நிற்பதால்செல்வம் இல்லாமையால் கற்றார் துன்புற மாட்டார் என்பதும்செல்வம் இருந்தும் கல்வி இல்லாமையால் கல்லாதவர் துன்புறுவார் என்பதும் பெறப்பட்டது.

 

     ஆனால்பரிமேலழகர்செல்வம் இல்லாமையால் கற்றார் துன்றுபுவர் என்கின்றார். அது உண்மைதான். என்றாலும்தமது முன்வினைப் பயனால் செல்வம் உண்டாகவில்லை என்னும் உண்மையை உணர்ந்துதாம் துன்புறுவதைக் கற்றார் ஒரு பொருட்டாகக் கொள்ளமாட்டார். கல்வி அறிவில்லாதவர்க்கோஅவர் படைத்துள்ள செல்வம் அவர்க்கும்பிறருக்கும் பயன்படாததோடுஅவரது செல்வம் அவரை நன்னிலையில் நிறுத்தத் துணை புரியவில்லையாதலால்அவர் இறுதியில் செல்வத்தின் பயனைப் பெறாது துன்புறுவர். மேலும்நியாய அநியாயங்களை உணராமல் அவர் பிறர்க்குத் துன்பம் செய்வார் என்பதும் வெளிப்படை.

 

ஆற்றுப் பெருக்கு அற்றுடிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.

 

என்று நல்வழிப் பாடல் கூறுவதால்கற்றார் அடையும் வறுமையால் பிறர்க்குத் துன்பம் இல்லை. ஆனால்கல்லாதாரின் செல்வத்தால் துன்பம் விளையும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே,

கல்லார்கண் பட்ட திரு.      

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது--- கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது

 

     கல்லார்கண் பட்ட திரு--- கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.

 

     (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும்திரு கல்லாரைக் கெடுக்கவறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாதுஎன்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபெரியபுராணத்தில் வரும் கலிய நாயனார் வரலாற்றை வைத்துகுமார பாரதி என்பார்,"திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் பாடி அருளிய பாடல் ஒன்று....

 

எள்ளா விளக்கு அரன்பால் ஏற்றவே,வாள்கலியர்

கொள்ளாரேல் ஏதும் கொடார்உலகில் - உள்ளார்கொல்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.      

 

இதன் பொருள் ---

 

     தொண்டை மண்டலத்திலே திருவொற்றியூரிலே உள்ள சக்கரப்பாடியிலே அவதரித்தவர் கலிய நாயனார். அவர் செக்கார் குலத்தவர். பெரும் செல்வர். செல்வம்யாக்கை முதலியனவற்றின் நிலையாமையை உணர்ந்தவர். சிவபுண்ணியம் செய்தலே மேல் எனத் தெளிந்தவர். அவ்வூர்ச் சிவாலயத்திலே உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்குகள் ஏற்றும் நியமம் பூண்டவர் அவர். அவருடைய அளவிறந்த பத்தியைப் பிறருக்குப் புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்டு அருளினார் சிவபெருமான். அவரது செல்வமெல்லாம் குன்றச் செய்தார். வறுமை மிக்கது. நாயனார் அக்காலத்தும் பணி குறையாமல் தம் மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கி வந்து விற்றுஅதனால் கிடைக்கும் கூலியைக் கொண்டு விளக்கேற்றி வந்தார். நாட்களில் அவரும் கொடாது ஒழிந்தனர். மனம் தளர்ந்தார். பின்பு எண்ணெய் ஆட்டும் இடத்தில் சென்று தொழில் செய்து கூலி பெற்றுத் திருவிளக்கு இட்டார். அத்தொழிலால் வரும் பேறும் கிடையாது முட்டுப்பாடு வந்தது. கவலை மிகக் கொண்டார். மனைவியாரை விற்றுத் திருவிளக்குப் பணி செய்ய முற்பட்டார். விலைக்கு வாங்குவார் இன்றித் தவித்தார். ஆலயம் அடைந்தார். திருவிளக்கு ஏற்றும் சமயத்திலே "இப்பணி மாறில் யான் இறப்பேன்" எனத் துணிந்தார். திரியிட்ட அகல்களைப் பரப்பினார். எண்ணெய்க்குப் பதிலாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே தமது கழுத்தை அரிந்தார். அப்போது சிவபெருமான் நேரில் எழுந்தருளினார். அவருடைய கரத்தைப் பிடித்தார். இடபவாகனக் காட்சி தந்தார். நாயனாரும் தாம் அடைந்த துன்பம் நீங்கி இன்புற்று வணங்கினார்.  

 

     கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாதுகல்லாதார்மாட்டு நின்ற செல்வம் என்று திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க. 

 

திரு கல்லாரைக் கெடுக்கும்வறுமை நல்லாரைக் கெடுக்காது. 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்,

நல்லறிவு உடையோர் நல்குரவு

உள்குதும் பெருயாம் உவந்து நனி பெரிதே...   --- புறநானூறு.

                                     

இதன் பொருள் ---

 

    மிகப் பேர் எவ்வம் உறினும் - யாம் மிகப் பெரிய துன்பத்தை அடைந்தாலும்எனைத்து உணர்ச்சி இல்லோர்  உடைமை  உள்ளேம் --- சிறிதும்அறிவில்லாதோருடைய செல்வம் பயன்படாமையின் அதனைநாம் நினைக்கமாட்டோம்நல்லறிவுடையோர் நல்குரவு --- நல்லறிவினைஉடையோரது வறுமை பயன் படுதலின் அதனைபெரும --– பெருமானேயாம் உவந்து நனி பெரிது உள்ளுதும் --- யாம் உவந்து மிகப் பெரிதும் நினைப்பேம். 

 

 

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்

அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்;

மறுமை அறியாதார் ஆக்கத்தின்,சான்றோர்

கழி நல்குரவே தலை.                  ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எறி நீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல் பார்த்து உண்பர் --- அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய பெரிய கடலை அடுத்திருந்தும்அதன் நீர் பயன்படாமையால் அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின் ஊற்றையே மக்கள் தேடிக்கண்டு உண்பர்மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவே தலை --- ஆதலால் மறுமைப் பயனறியாது ஒழுகும் புல்லியோர் செல்வத்தினும் குணநிறைந்த பெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும்.

 

            ஈயாதார் பெருஞ்செல்வராய் இருப்பினும் அவரால் நன்மையில்லை.

 

 

நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்

கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், - தொல்லை

வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!

நினைப்ப வருவது ஒன்று இல்.         ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் --- உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமான மேலோர் உலகத்தில் வளமின்றியிருக்கஅவ்வினிமையுங் கல்வியறிவும் இல்லாக் கீழோர்க்கு ஒரு செல்வநிலை உண்டான காரணம்தொல்லை வினைப்பயன் அல்லது வேல்நெடு கண்ணாய் நினைப்ப வருவதொன்று இல் --- வேற்படை போன்ற நீண்ட கண்களையுடைய மாதே! பழைய நல்வினையின் பயனே அல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.

 

            நற்குண நற்செயல்கள் இல்லாதவர் செல்வராய் இருப்பினும்சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதி மதியாது செல்வர்.

 

 

சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்

பெரியவர் நல்குரவு நன்றே --- தெரியின்

மதுமயங்கு பூங்கோதை மாணி்இழாய்! மோரின்

முதுநெய்தீது ஆகலோ இல். --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மது மயங்கு பூ கோதை மாணிழாய் --- தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்!தெரியின் --- ஆராய்ந்தால்மோரின் முதுநெய் தீது ஆகலோ இல் --- புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்)சிறியவர் எய்திய செல்வத்தின் --- அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிடபெரியவர் நல்குரவு மாண நன்றே --- அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.

 

       அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையேமிகச் சிறந்தது.

 

       மோர் புதிதாயினும் நெய் பழையதாயினும் மோரை விட நெய்யில் மிக்க பயனுண்டு. அதுபோலசிறியவர் எய்தியது செல்வமே ஆயினும்பெரியவர் எய்தியது வறுமையே ஆயினும்அவர் செல்வத்தைவிட இவர் வறுமையே மிக நல்லது. சிறியார் செல்வம் தன்னையும் பிறரையும் கெடுத்தலானும்பெரியார் வறுமை அவையின்றி நிற்றலானும்அவர் செல்வத்தினும் இவர் நல்குரவு சிறந்ததெனப்பட்டது. மாறாக மேல் செல்வம்நல்குரவு என்றலின்முதுநெய் என்றதற்குப் புதிய மோர் கொள்ளப்பட்டது.

 

மெய்ந்நெறி உணர்கிலார் வெறுக்கை பெற்றது

துன்னிய கிளைக்கு ஒரு துன்பம் ஆதல் போல்,

ஒன்னலன் விடும் கணை உலப்பின்று ஓடலால்

தன் உறு படைகளைத் தானும் கொன்றவே.

                                                              --- கந்தபுராணம்சிங்கமுகாசுரன் வதைப்படலம்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...