பொருள் இல்லையேல் எதுவுமில்லை




பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,
     புண்ணியம் இல்லை, என்றும்
மருவிய கீர்த்தி இல்லை,
     மைந்தரில் பெருமை இல்லை,
கருதிய கருமம் இல்லை,
     கதிபெற வழியும் இல்லை,
பெருநிலம் தனில் சஞ்சாரப்
     பிரேதமாய்த் திரிகுவாரே.

     இதன் பொருள் ---

     பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை --- செல்வம் இல்லாத வறியவர்களுக்கு இவ்வுலக இன்பம் இல்லை,

     புண்ணியம் இல்லை ---  அப் பொருளைக் கொண்டு நல்லறம் செய்வதால் உண்டாகும் புண்ணியம் இல்லை,

     என்றும் மருவிய கீர்த்தி இல்லை --- பொருந்திய புகழ் என்பது எக்காலத்தும் இல்லை,

     மைந்தரில் பெருமை இல்லை --- மக்களில் அவருக்கு நன் மதிப்பு இல்லை,

     கருதிய கருமம் இல்லை --- எண்ணிய செயல் முடிவது இல்லை,

     கதிபெற வழியும் இல்லை --- நல்ல நிலைமையை அவர்களால் அடையவும் முடியாது,

     பெருநிலம் தனில் சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே --- பரந்த இந்தப் பூமியில் அவர்கள் நடைப்பிணமாய் பயனில்லாமல் திரிவார்கள்.

     கருத்து --- "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகி ஆங்கு" என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...