கல்லாத
மாந்தரையும், கடுங்கோபத் துரைகளையும், காலம் தேர்ந்து
சொல்லாத
அமைச்சரையும், துயர்க்கு உதவாத் தேவரையும், சுருதி நூலில்
வல்லா
அந்தணர் தமையும், கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார்
போல் அருகு இருக்கும் மனைவியையும், ஒருநாளும் நம்ப ஒணாதே.
இதன்
பொருள் ---
கல்லாத மாந்தரையும் --- அறிவு நூல்களைக் கற்று
அறிவு பெற்றிராத மனிதர்களையும்,
கடுங்கோபத் துரைகளையும் --- கொடிய கோபத்தை
உடைய அரசர்களையும், (தலைவர்களையும்)
காலம் தேர்ந்து சொல்லாத அமைச்சரையும் --- எதிர் காலத்தின் நிகழ்ச்சிகளைத்
தமது அறிவு நுட்பத்தால் உய்த்து உணர்ந்து, நன்மை தீமைகளை அவை வரும் முன்பே சொல்லாத
அமைச்சர்களையும்,
துயர்க்கு உதவாத் தேவரையும் --- துன்பம் நேர்ந்த காலத்தில்
உதவி செய்து, அத் துன்பங்களை நீக்குதற்கு உதவாத தேவதைகளையும்,
சுருதி நூலில் வல்லா அந்தணர் தமையும் --- வேத சாத்திரங்களைக்
கற்றலிலும், கேட்டலிலும் வல்லமை இல்லாத அந்தணர்களையும்,
கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி --- தன்னை
மனைவியாகக் கொண்டவனுடன் எல்லா நாள்களிலும் சிறப்பாகப் பேசி நடித்து,
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் --- நல்லவள் போல்
நடந்து கொண்டு அவனோடு இருந்துகொண்டே ஏமாற்றும் கெடுமதி படைத்த மனைவியையும்,
ஒருநாளும் நம்ப ஒணாதே --- எக்காலத்தும்
நம்புதல் கூடாது.
No comments:
Post a Comment