அரவினை ஆட்டுவாரும்





அரவினை ஆட்டுவாரும், அரும் களிறு ஊட்டுவாரும்,
இரவினில் தனிப்போவாரும், ஏறியும் நீர் நீந்துவாரும்,
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்,
அரசனைப் பகைத்திட்டாரும், ஆர்உயிர் இழப்பார் தாமே.

பாம்பினை ஆட்டுகின்ற பாம்பாட்டிகளும்,

அருகில் நெருங்க முடியாத யானைக்கு ஊட்டி வளர்க்கின்ற பாகரும்,

இரவுக் காலத்தில் துணை இல்லாமல் தனியாகப் போகின்றவர்களும்,

அலைகள் மோதுகின்ற நீர் நிலையில் நீந்திச் செல்பவரும்,

மணம் நிறைந்த கூந்தலை உடைய பரத்தையை விரும்பிச் சேர்பவர்களும்,

தம்மை ஆளுகின்ற அரசனைப் பகைத்துக் கொண்டவர்களும்,

ஆகிய இவர்கள் எல்லாம், தமது அருமையான உயிரை இழப்பார்கள்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...