விருந்து உபசரிப்பு
ஒப்புடன்
முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி,
உப்பிலாக்
கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்.
முப்பழ
மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின்
கப்பிய
பசியினோடு கடும்பசி ஆகும் தானே. 4.
மனம்
ஒத்த அன்புடன், முகம் மலர்ந்து, உபசாரங்கள் செய்து, உண்மையான சொற்களைப்
பேசி,
உப்பு
இல்லாத கூழை வார்த்தாலும், அதனை உட்கொள்வது அமுதம் போல இனிமையைத் தரும். உடலுக்கும்
நலத்தைச் செய்யும்.
முப்பழம்
என்று சொல்லக் கூடிய மா, பலா, வாழை என்னும் பழ வகைகளோடு, பால் சோற்றையும், உள்ளத்தில் அன்பு
இல்லாமல்,
முகம்
சுளித்து விருந்தாக இடுவார்கள் ஆயின், அன்போடு இடப்படாத அந்த பகட்டான உணவை உண்டால், முன்னே வயிற்றை முட்டிக்
கொண்டு இருந்த பசியோடு, முன்பு இருந்ததை விடக் கொடிய பசியானது உண்டாகும்.
அன்போடு
இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும்
திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத்தகும்.
உண்மையில் பயனுள்ள. மிக்க நன்றி.
ReplyDelete