ஆசாரம்
செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்,
ஆசாரம்
நன்மை ஆனால் அவனியில் தேவர் ஆவார்,
ஆசாரம்
செய்யார் ஆகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார்
போல் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.
இதன்
பொருள் ---
ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம் --- ஒழுக்கத்தோடு
ஒருவர் வாழ்வாரானால் அவருக்கு நல்ல அறிவும், நல்ல பெயரும் உண்டாகும்.
ஆசாரம் நன்மை ஆனால் அவனியில் தேவர் ஆவார் --- அந்த
ஒழுக்கமானது தன்னோடு நில்லாமல், பிறருக்கும் நன்மை புரிவதாக அமைந்தால், இந்த உலகத்தில் அவர்
மனிதராக வாழ்ந்தாலும், தெய்வத்தோடு ஒப்ப மதிக்கப்படுவர்.
ஆசாரம் செய்யார் ஆகில் --- ஒழுக்க நெறியில் ஒருவர்
வாழார் ஆகில்,
அறிவொடு புகழும் அற்று --- அவருக்கு நல்லறிவும், நற்பெயரும் இல்லாமல்,
பேசார் போல் பேச்சுமாகி --- நாக்கு உள்ளிழுத்து, வாய் பேசாத உமை ஆகி, சைகைகளால் குறிப்புக்
காட்டி வாழ்ந்து,
பிணியொடு நரகில் வீழ்வார் --- நோய்களால் துன்பத்தை
அடைந்து, மறுமையில் நரகத்தில் உழலுவார்.
No comments:
Post a Comment