கழுதை
கா எனக் கண்டு, நின்று ஆடிய அலகை
தொழுது, மீண்டும் அக் கழுதையைத்
துதித்திட, அதுதான்
பழுதிலா
நமக்கு ஆர் நிகர் இங்கு எனப் பகர்தல்,
முழுது
மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்.
இதன்
பொருள் ---
பழுது இலா நமக்கு இங்கு ஆர் நிகர் எனப் பகர்தல் --- நம்மிடத்தில்
தான் ஒரு குற்றமும் இல்லையே, நமக்கு ஒப்பு
ஆனவர் இந்த உலகத்தில் யார் உள்ளனர் என்று, தம்மைப் போன்ற
மூடரிடத்தில் சொல்லி, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல்,
முழுது மூடரை --- அறிவு மழுங்கிய முழு மூடரை,
மூடர் --- அவரைப் போன்ற மூடர்,
கொண்டாடிய முறைமை போல் --- புகழ்ந்து
கொள்ளும் முறைமை போன்றது.
(எப்படி என்னில்,)
கழுதை கா எனக் கண்டு --- (இனிமை தராத விகார
ஒலியினை எழுப்பும்) கழுதையானது கா என்று பெருங்குரல் எடுத்துக் கதற, அவ்வாறு
கதறியதைப் பார்த்து,
நின்று ஆடிய அலகை தொழுது --- (கழுதையின்
குரலை இனிய இசை என்று கருதி ஆனந்தமடைந்து) அதன் எதிரே நின்று, ஆனந்தக்
கூத்தாடிய பேயானது, அந்தக் கழுதையை வணங்கி,
மீண்டும் அக் கழுதையைத் துதிசெயல் போலும் ---
(உன்னுடைய குரலைப் போல் இனிமை தருவதை நான் எங்கும் கேட்டது
இல்லை என்று) திரும்பவும் அந்தக் கழுதையை துதித்துக் கூறுவதை ஒக்கும்.
No comments:
Post a Comment