திரு நெல்வாயில்
அரத்துறை
(திருவட்டுறை, திருவரத்துறை)
நடு நாட்டுத் திருத்தலம்.
தொழுதூர் - விருத்தாசலம் சாலையில்
தொழுதூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில்
கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மி. சென்று இத்திருத்தலத்தை
அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான பெண்ணாகடத்தில் இருந்து தென்மேற்கே
சுமார் 6 கி.மீ. தொலைவில்
திருநெல்வாயில் அரத்துறை உள்ளது.
இறைவர்
: அரத்துறைநாதர், ஆனந்தீசுவரர், தீர்த்தபுரீசுவரர்
இறைவியார்
: அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி
தல
மரம் : ஆல மரம்
தீர்த்தம் : நிவா நதி
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - எந்தையீசனெம் பெருமான்.
2. அப்பர் - கடவுளைக்
கடலுள்.
3. சுந்தரர் - கல்வாய்
அகிலும்.
திருத்தலப் பெருமை:
திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர்
முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய
தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை திருக்கையால் ஞானப்பால்
பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும்
தலங்களுக்கு எல்லாம் திருயாத்திரை தொடங்கினார். திருஞானசம்பந்தர் சிறு பாலகனாக
இருந்ததால் அவருடைய தந்தையார் திருஞானசம்பந்தரைத் தோளில் தாங்கிச் செல்வது வழக்கமாக
இருந்தது. திருதூங்கானைமாடம் என்னும் சிவத்தலத்தைத் தரிசித்து திருநெல்வாயில்
அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே
சென்றார். திருஞானசம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும்
வருந்தினர். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில்
இறைவன் தோன்றி திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும்
அவற்றை திருஞானசம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும்
ஆணையிட்டார். இதே போன்று திருஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி
முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள்
காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோயில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து
பார்க்க அங்கு முத்துச் சிவிகை,
முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக்
கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு சென்று
சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச்
சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில்
அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். திருஞானசம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத்
தொழுது திருப்பதிகம் பாடி வணங்கினார்.
தீர்த்தபுரீசுவரர் ஆலயம் கிழக்கு
நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால்
வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள்
நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன.
அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள
இலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி
தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும்
அடுத்துள்ளன.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக
கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர்
சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத்
தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம்
நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்குச்
சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும்
நந்தியும் உள்ளன.
வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த
போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது
என்றும், இதனால் இத்தலத்தில்
நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம்.
வெள்ளாற்றின் கரையிலுள்ள புண்ணியத்துறைகளில் இத்தலமும் ஒன்றாகும். மக்களின்
பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம்
பாடப்பெற்ற சிவத்தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், தீங்கு ஆர் புற தெய்வத்
தீங்குழியில் வீழ்ந்தவரைத் தாங்கா அரத்துறையில் தாணுவே என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 184
ஆங்கு
நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்து,அரு மறைஓசை
ஓங்கு
தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற ஒருதனிப்
பரஞ்சோதிப்
பாங்கு
அணைந்து,முன் வலங்கொண்டு,
பணிவுற்று, பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு
நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும்
தெரிவித்தார்.
பொழிப்புரை : அங்கு வீற்றிருக்கும்
தலைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று
`திருப்பெண்ணாகடம்' என்ற பதியை அடைந்து, அரிய மறைகளின் ஓசை முழங்கும் `திருத்தூங்கானைமாடம்' என்ற அக்கோயிலுள் விரும்பி
வீற்றிருக்கின்ற ஒப்பற்ற மேலாய ஒளியான இறைவரின் அருகணைந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து, எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, `தீங்கினின்றும் நீங்கும்
கருத்துடையீர்களே! இங்குத் தொழுமின்கள்' என்ற
கருத்துடைய இசைப் பதிகத்தைப் பாடியருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 185
கருவ
ரைப்பில் புகாதவர் கைதொழும்
ஒருவ
ரைத்தொழுது உள்ளம் உவந்துபோய்ப்
பெருவ
ரத்தினில் பெற்றவர் தம்முடன்
திருவ
ரத்துறை சேர்தும்என்று ஏகுவார்.
பொழிப்புரை : பிறவியின் எல்லைக்கு
உட்படாத அடியவர்கள் கை தொழுகின்ற சுடர்க்கொழுந்தீசரை வணங்கி, மனம் மகிழ்ந்து, விடைபெற்றுக் கொண்டவர், தோணியப்பரிடம் தவம் கிடந்து பெற்ற
வரத்தால் தம்மை ஈன்ற தந்தையாருடன் `திருவரத்துறையைச்' சேர்வோம் எனச் செல்பவராய்,
பெ.
பு. பாடல் எண் : 186
முந்தை
நாள்கள் ஒரோஒரு கால்முது
தந்தை
யார்பியல் மேல்இருப் பார்,தவிர்ந்து
அந்த
ணாளர் அவர்அரு கேசெலச்
சிந்தை
செய்விருப் போடுமுன் சென்றனர்.
பொழிப்புரை : முன்நாள்களில்
செல்லும் பொழுதெல்லாம் முதுமைப் பருவம் உடைய தந்தையாரின் தோள் மீது ஓரொருகால்
எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார்,
இதுபொழுது
அந்நிலையை விடுத்து, அந்தணர்களும்
அத்தந்தையாரும் தம்மைச் சூழ்ந்துவர மனத்திற் கொண்ட பெருவிருப்போடு, முன்னே நடந்து சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 187
ஆதி
யார்தம் அரத்துறை நோக் கியே
காத
லால்அணை வார்கடிது ஏகிடத்
தாதை
யாரும் பரிவுஉற, சம்பந்தர்
பாத
தாமரை நொந்தன பைப்பய.
பொழிப்புரை : பழைமையுடையவரான
சிவபெருமானின் திருவரத்துறையினை நோக்கி, மிக்க
விருப்புடன் அணைபவராய், விரைவாய்ச் செல்லவும், தந்தையாரும் வருந்த, ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளும்
சிறிதளவு நொந்தன.
பெ.
பு. பாடல் எண் : 188
மறைஅ
னைத்தும் ஒருவடிவு ஆம்என
நிறைம
திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்துஎனத்
துறைஅ
லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ
ரைத்தொழு வான்விரைந்து ஏகினார்.
பொழிப்புரை : மறைகள் யாவும்
ஒருவடிவம் கொண்டாற்போல் நிறையும் திங்கள் ஒன்று, நீண்ட இம்மண்ணுலகத்தில் வந்து
சேர்ந்தாற் போலச் சென்று, நீர்த் துறைகளில்
அலைகளை வீசும் கங்கை சூடும் திருவரத்துறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தொழுவதற்காக
விரைந்து சென்றனர்
பெ.
பு. பாடல் எண் : 189
பாசம்
மற்றுஇலர் ஆயினும், பார்மிசை
ஆசை
சங்கரற்கு ஆயின தன்மையால்,
தேசு
மிக்க திருவுரு வானவர்
ஈச
னைத்தொழு தேதொழுது ஏகினார்.
பொழிப்புரை : உலகியல் பாசம்
சிறிதும் இல்லாதவராயினும் இறைவனிடத்துப் பாசம் கொண்ட தன்மையால் சிவஒளி மிக்க திரு
உருவான பிள்ளையார் சிவபெருமானை வணங்கியவாறு சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 190
இந்த
மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த
வைதிக மாமணி யானவர்
சிந்தை
ஆரமுது ஆகிய செஞ்சடைத்
தந்தை
யார்கழல் தாழ்ந்துஎழுந்து ஏகினார்.
பொழிப்புரை : இப்பேருலக இருள்
நீங்கத் தோன்றிய வேதியர்குல மணியான சம்பந்தர், மனத்தில் ஊறும் அமுதமான சிவந்த
சடையையுடைய தந்தையாம் சிவபெருமானின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி எழுந்து
சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 191
மாறன்
பாடி எனும்பதி வந்துஉற
ஆறு
செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு
செல்பவர் வெய்துஉறப் பிள்ளையார்
ஏறும்
அஞ்செழுத்து ஓதிஅங்கு எய்திட.
பொழிப்புரை : `மாறன் பாடி' என்ற ஊரில் வந்து சேர, வழி நடந்து செல்லும் வருத்தத்தால்
உண்டான சோர்வால் தம்மைச் சூழ வரும் அடியார்கள் இளைப்படைய, சிறந்ததான ஐந்தெழுத்தைப் எண்ணியவாறு
பிள்ளையார் அங்குச் சேர,
பெ.
பு. பாடல் எண் : 192
உய்ய
வந்தசம் பந்தர் உடன்வந்தார்க்கு
எய்து
வெம்மை இளைப்புஅஞ்சி னான்போலக்
கைகள்
ஆயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய
வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
பொழிப்புரை : உலகு உய்வதற்காக வந்த
ஞானசம்பந்தருடன் வந்தவர்க்கு, வழிநடந்து வந்ததன்
வெம்மையினால் உண்டான இளைப்பைப் பார்த்து, அச்சம்
கொண்டவனைப் போல் தன் அளவற்ற கைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு, மறைந்து போய்க் கதிரவன் மேலைக் கடலில்
விழுந்தான்.
பெ.
பு. பாடல் எண் : 193
அற்றை
நாள்இர வுஅப்பதி யின்இடைச்
சுற்று
நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம்
ஊர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி
மாதவத் தோருடன் மேவினார்.
பொழிப்புரை : அன்றிரவில்
அப்பதியில் தம்மைச் சூழ இருந்த திருத்தொண்டர்கள் போற்ற, ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின்
திருவடிகளையே போற்றுபவரான பிள்ளையார், உள்ளொளி
பெருக்கும் வெற்றி பொருந்திய மாதவத்தவருடன் அங்குத் தங்கியிருந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 194
இந்நி
லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன
னார்தம் வழிவருத் தத்தினை
அன்னம்
ஆடும் துறைநீர் அரத்துறைச்
சென்னி
ஆற்றர் திருவுளம் செய்தனர்.
பொழிப்புரை : இந்நிலையில் அழகு
மிக்க சீகாழித் தோன்றலாரின் வழி வருத்தத்தை, அன்னப் பறவைகள் பொருந்திய நீர்த்
துறைகளையுடைய திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் தலையில் கங்கையாற்றையுடைய
இறைவர், தம் திருவுள்ளத்தில்
கொண்டார்.
பெ.
பு. பாடல் எண் : 195
ஏறுதற்குச்
சிவிகை, இடக்குடை,
கூறி
ஊதக் குலவுபொன் சின்னங்கள்,
மாறுஇல்
முத்தின் படியினால் மன்னிய
நீறு
உவந்த நிமலர் அருளுவார்.
பொழிப்புரை : பிள்ளையார் ஏறிச்
செல்வதற்குச் சிவிகையும், மேலே கவித்துக்
கொள்வதற்குக் குடையும், அவர்தம் பொருள்சேர்
புகழை எடுத்துக் கூறி ஊதுவதற்கு விளக்கம் கொண்ட அழகிய சின்னங்களும் ஆகிய இவற்றை
முத்துக்கள் பதிய அமைத்த சிறப்புடன் வழங்க, ஒப்பில்லாத திருநீற்றை விரும்பும்
அரத்துறை இறைவர் அருள்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 196
நீடு
வாழ்பதி ஆகும்நெல் வாயிலின்
மாட
மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு
கங்குல் கனவில் குலமறை
தேடு
சேவடி தோன்றமுன் சென்றுபின்.
பொழிப்புரை : பெருவாழ்வு பெற்ற
திருப்பதியான திருநெல்வாயில் அரத்துறையில் மாடங்களைக் கொண்ட பெரிய இல்லங்கள்
தோறும் உள்ள மறையவர்களுக்கு அன்றிரவு கனவில், பெருமையுடைய நான்மறைகளும் தேடும்
செவ்விய திருவடிகள் தோன்றுமாறு,
அவர்
முன்போய்,
பெ.
பு. பாடல் எண் : 197
"ஞான சம்பந்தன்
நம்பால் அணைகின்றான்,
மான
முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன
சின்னம்நம் பால்கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து
கொடும்"என.
பொழிப்புரை : `ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான். அரிய
கலைகளுக்கெல்லாம் தலைவனான அவனிடம் நீங்கள் பெரிய முத்துச் சிவிகையையும் அழகிய
குடையையும், பொருந்திய
சின்னங்களையும் நம்மிடம் பெற்றுக் கொண்டு போய்க் கொடுங்கள்\' என்று இறைவர் உரைத்தருள,
பெ.
பு. பாடல் எண் : 198
அந்த
ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து
கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தை
யோடும் செழுநீர் அரத்துறை
இந்து
சேகரர் கோயில்வந்து எய்தினர்.
பொழிப்புரை : இறைவர் உரைத்த அளவில், அந்தணர்கள் வந்து ஒன்றாகக் கூடி, தாம் தாமும் கண்ட கனவைச் சொல்லி
மகிழ்ந்து, அற்புதமான
சிந்தையுடன் செழுமையான நீர்வளம் பொருந்திய திருவரத்துறையில் எழுந்தருளிய பிறை
சூடிய சடையையுடைய பெருமானின் கோயிலின் வாயிலில் வந்து கூடினர்.
பெ.
பு. பாடல் எண் : 199
ஆங்கு
மற்ற அருள்அடி யாருடன்
ஓங்கு
கோயில்உள் ளார்க்கும்உண்டு ஆயிட
"ஈங்குஇதுன்ன அதிசயம்"
என்பவர்
தாங்கள்
அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
பொழிப்புரை : அங்கு முன் சொன்ன
வண்ணம் இறைவர் அருள் அங்குள்ள அடியாருடன் ஓங்கு கோயிலுள் உள்ளவர்களுக்கும்
உண்டாகியது. உண்டாகவே `இங்கு இது என்ன
பேரதிசயம்' என்று வியந்தவர்கள், அங்குவந்து கூடிய அம்மறையவர்களுக்குத்
தாங்கள் முதலில் கூறினர்.
பெ.
பு. பாடல் எண் : 200
சால
மிக்க வியப்புஉறு தன்மையின்
பாலர்
ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம்
எய்திடக் காதல் வழிப்படும்
சீலம்
மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
பொழிப்புரை : மிகப் பெரிய வியப்பை
அடைந்த நிலையில், அச்சமயத்தில்
திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வரவும் அன்பு வழிப்பட்ட சீலம் உடைய அவர்கள்
கோயிலின் கதவைத் திறந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 201
திங்கள்
நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க
வெண்குடை தூய சிவிகையும்
பொங்க
ஊதும் பொருஅருஞ் சின்னமும்
அங்கண்
நாதர் அருளினால் கண்டனர்.
பொழிப்புரை : சந்திரன் போன்ற
தண்ணிய செழுமையான முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடையும், தூய சிவிகையும், ஒலி மிகுமாறு ஊதப்பெறும் ஒப்பிலாத
சின்னங்களும் ஆகிய இவற்றை அங்கு இறைவரின் திருவருளால் அவர்கள் பார்த்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 202
கண்ட
பின்அவர் கைதலை மேற்குவித்து,
எண்தி
சைக்கும் விளக்குஇவை ஆம்எனத்
தொண்ட
ரோடும் மறையவர் சூழ்ந்துஎழுந்து
அண்டர்
நாடும் அறிவுஉற ஆர்த்தனர்.
பொழிப்புரை : அவற்றைக் கண்ட
அவர்கள் தம் கைகளைத் தலைமீது குவித்து, `இவை
எண்திசைக்கும் விளக்காகும்\' எனக் கூறி, தொண்டர்களுடன் சூழ்ந்து, வணங்கி, எழுந்து, தேவர் உலகமும், அறியும்படி மகிழ்வைப் பெருக்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 203
சங்கு
துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு
பல்லிய நாதம் பொலிந்துஎழ
அங்க
ணன்அரு ளால்அவை கொண்டுஉடன்
பொங்கு
காதல் எதிர்கொளப் போதுவார்.
பொழிப்புரை : சங்கு, துந்துபி, தாரை, பேரிகை முதலியவாகப் பேரொலி பெருக்கும்
இயங்களின் ஓசை பொலிவு பெற்று எழுமாறு செய்து, இறைவரின் திருவருளால் வரப்பெற்ற
அச்சிவிகை, குடை, சின்னங்கள் என்ற இவற்றை உடன் கொண்டு, மேன்மேலும் எழுகின்ற ஆசை எதிர்கொள்ளப்
போவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 204
மாசுஇல்
வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில்
சீர்ச்சண்பை ஆண்தகை யார்க்குஎதிர்
தேசு
உடைச்சிவி கைமுத லாயின
ஈசர்
இன்அரு ளால்தாங்கி ஏகினார்.
பொழிப்புரை : குற்றம் இல்லாத
வாய்மையுடைய திருநெல்வாயிலில் உள்ள அந்தணர்கள், குற்றமற்ற சிறப்பையுடைய சீகாழியில்
தோன்றிய பிள்ளையாருக்கு, ஒளியுடைய சிவிகை
முதலியவற்றை இறைவரின் திருவருளால் தாங்கிச் சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 205
இத்த
லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த
லைச்சண்பை நாதர்க்கும் அவ்இரா
முத்தம்
நல்சிவி கைமுத லாயின
உய்த்து
அளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
பொழிப்புரை : இவ்விடத்திலுள்ள
இவர்கள் இவ்வாறு சென்றனர். அங்குச் சீகாழித் தலைவரான பிள்ளையாருக்கும் அன்றைய இரவே
நல்ல முத்துக்கள் பதித்து வைத்த சிவிகை முதலானவற்றை ஏற்றுப் பயன் கொள்ளுமாறு முன்
உணர்த்துவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 206
அள்ளல்
நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள
லார், "நாம் மகிழ்ந்து
அளிக்கும் அவை
கொள்ளல்
ஆகும்,கொண்டு உய்த்தல்
செய்வாய்" என
உள்ள
வாறுஅருள் செய்ய உணர்ந்தபின்.
பொழிப்புரை : சேறுமிக்க நீர்வளம்
வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் வள்ளலாரான
சிவபெருமான், `நாம்
மகிழ்ந்தளிக்கும் இச்சிவிகை முதலானவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகும் ஆதலின், அவற்றை ஏற்றுப் பயன் கொள்வாயாக!' என்று பிள்ளையாருக்கு அருளிச் செய்ய, அவ்வருளிப்பாட்டை அறிந்து உறக்கம்
நீங்கிய பின்பு,
பெ.
பு. பாடல் எண் : 207
சண்பை
ஆளியார் தாம்கண்ட மெய்யருள்
பண்பு
தந்தையார் தம்முடன் பாங்குஅமர்
தொண்ட
ருக்குஅருள் செய்து தொழாமுனம்
விண்பு
லப்பட வீங்குஇருள் நீங்கலும்.
பொழிப்புரை : சீகாழித் தலைவரான
சம்பந்தர், தாம் கனவில் கண்ட
மெய்யருளின் தன்மையைத் தந்தையாருக்கும் அருகிலிருந்த தொண்டர்களுக்கும் கூறியருளித்
திருவருளைத் தொழுவதற்கு முன்னமேயே,
வானம்
வெளிப்பட்டுத் தோன்ற, இருள் நீங்கவும்,
பெ.
பு. பாடல் எண் : 208
மாலை
யாமம் புலர்வுஉறும் வைகறை
வேலை
செய்வினை முற்றிவெண் நீறுஅணி
கோல
மேனிய ராய்க்கைம் மலர்குவித்து
ஏல
அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்.
பொழிப்புரை : முன்னர் இருந்த
மாலையும் யாமமும் முறையே நீங்க,
பொழுது
புலரும் விடியற்காலையில் செயத்தக்க கடன்களை முடித்து, வெண்மையான திருநீற்றினை அணிந்த
சிவப்பொலிவு கொண்ட அழகிய திருமேனியராகி, கைம்மலர்களைத்
தலைமேல் குவித்துப் பொருந்துமாறு திருவைந்தெழுத்தை ஓதி எழுந்தருளி யிருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 209
போத
ஞானப் புகலிப் புனிதரைச்
சீத
முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக்
காதல்
செய்பவன் போலக் கருங்கடல்
மீது
தேரின்வந்து எய்தினன் வெய்யவன்.
பொழிப்புரை : மெய்யுணர்தலாகிய
ஞானம் பெற்ற தூயவரான சீகாழித் தலைவரைக் குளிர்ந்த முத்துக்களையுடைய சிவிகையில்
ஏற்றி வணங்க, மிக்க அன்பு கொண்டவன்
போலக் கதிரவனும் கரிய கடல்மீது தோன்றித் தன்தேர் மீது ஏறிவந்தனன்.
பெ.
பு. பாடல் எண் : 210
ஆய
போழ்தின் அரஎனும் ஆர்ப்புடன்
தூய
முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய
சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோடு
ஏய
அந்தணர் தாம்எதிர் தோன்றினார்.
பொழிப்புரை : அதுபொழுது `அரகர\' என்ற முழக்கத்துடன் தூய முத்தினால் ஆய
சிவிகையையும், ஒளிபொருந்திய
குடையையும், பொருந்திய
சின்னங்களையும் தாங்கிக் கொண்டு மெய்யன்பர்கள் உடனே பொருந்திய அந்தணர்களும், அங்கிருந்த பிள்ளையாரின் எதிரே வந்து
தோன்றினர்.
பெ.
பு. பாடல் எண் : 211
வந்து
தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த
வார்பொழில் காழிநல் நாடர்முன்,
"அந்தம் இல்சீர்
அரத்துறை ஆதியார்
தந்த
பேர்அருள் தாங்குவீர்" என்றனர்.
பொழிப்புரை : வந்து தோன்றிய
அந்தணர்களும் மெய் அன்பர்களும் மணம் மிக்க பொழில்களையுடைய சீகாழித் தலைவர் ஆன
சம்பந்தர் திருமுன்பு நின்று, `அழிவற்ற சிறப்பையுடைய
திருவரத்துறை இறைவர் அளித்தருளிய பேரருள் வடிவான இப்பொருள்களை ஏற்றுக்கொள்வீராக\' என வேண்டினர்.
பெ.
பு. பாடல் எண் : 212
என்று
தங்களுக்கு ஈசர் அருள்செய்தது
ஒன்றும்
அங்குஒழி யாமை உரைத்துமுன்
நின்று
போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று
உளார்அருள் என்று வணங்கினார்.
பொழிப்புரை : ஈசர் தமக்குக் கனவில்
அருளியதும் நனவில் வழங்கியதுமான அருளிச் செயல்களுள் ஒன்றையும் விடாமல் எடுத்துக்
கூறிப் பிள்ளையாரின் முன் நின்று போற்றி வணங்கினர். `இவ்வருஞ் செயல்கள் எல்லாம் பெருமன்றுள்
ஆடும் பெருமானின் திருவருளேயாகும்.'
எனப்
பிள்ளையார் கூறி வணங்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 213
மெய்ம்மை
போற்றி விடாத விருப்பினால்
தம்மை
உன்னும் பரிசுதந்து ஆள்பவர்
செம்மை
நித்தில யானச் சிறப்புஅருள்
எம்மை
யாள்உவப் பான்இன்று அளித்ததே.
பொழிப்புரை : உள்ளவாறு போற்றிப்
பற்றுவிடாத விருப்பத்தால் தம்மை நினைத்திருக்கும் தன்மையைக் கொடுத்து அருளுகின்ற
இறைவர், செம்மையான முத்துச்
சிவிகையாம் சிறப்பை அளித்தல் எம்மைத் தம் அடியவராக உவந்து ஆட்கொள்ளும் பொருட்டாய்
இன்று அளித்த பேறுதான் என்னே! என வியந்தனராய்,
குறிப்புரை : இப்பாடல், அடுத்திருக்கும் `எந்தையீசன்' எனத் தொடங்கும் பாடலை அடுத்துச் சில
பதிப்புக்களிலும், `பொடியணிந்த' எனும் பாடலை அடுத்துச் சில
பதிப்புக்களிலும் காணப்படுகின்றது. இவ்வீரமைவுகளும் வரலாற்றுத் தொடர்ச்சிக்குப்
பொருந்துமாறில்லை என்பர் சிவக்கவிமணியார்.
பெ.
பு. பாடல் எண் : 214
"எந்தை ஈசன்"
எனஎடுத்து, "இவ்அருள்
வந்த
வாறுமற்று இவ்வண மோ"என்று
சிந்தை
செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி
ஆரப் புகன்றுஎதிர் போற்றுவார்.
பொழிப்புரை : `எந்தை ஈசன்' எனத் தொடங்கிச் சிவபெருமானின் திருவருள்
இருந்த வண்ணம் இவ்வண்ணமோ என்று சிந்தை செய்யும் இத்திருப்பதிகத்து இசையை உள்ளம் நிறைவு
கொள்ளும் வரை புகன்று எதிரே நின்று போற்றுவாராய்,
குறிப்புரை : எதிர்போற்றி - இறைவன்
அருளிய அருங்கொடைகளை அப்பெருமானது திருமுன்னிலையில் நின்று போற்றி `எந்தை ஈசன்'(தி.2 ப.90) எனத் தொடங்கும் இப்பதிகம்
பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். அரத்துறை அடிகள் தம் அருள் அப்பெருமானை
நாளும் மனம், மொழி, மெய்களால் வணங்கி நிற்பார்க்கல்லாது
கிட்டாது எனப் பாடல்தொறும் கூறப்பட்டுள்ளது.
பெ.
பு. பாடல் எண் : 215
பொடிஅ
ணிந்த புராணன் அரத்துறை
அடிகள்
தம்அரு ளேஇது ஆம்எனப்
படிஇ
லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது
போற்றிப் பதிகம் நிரப்பினார்.
பொழிப்புரை : திருநீற்றை அணிந்த
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் திருவரத்துறை இறைவரின் திருவருளே
இதுவாகும் என ஒப்பற்ற சொல்மாலைகளைப் பாடி, நீள நினைந்து வணங்கித் திருப்பதிகத்தை
நிறைவு செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 216
சோதி
முத்தின் சிவிகைசூழ் வந்து,பார்
மீது
தாழ்ந்து,வெண் நீற்றுஒளி
போற்றிநின்று,
ஆதி
யார்அருள் ஆதலின் அஞ்செழுத்து
ஓதி
ஏறினார், உய்ய உலகுஎலாம்.
பொழிப்புரை : ஒளிபொருந்திய
முத்துச் சிவிகையினைச் சூழ்ந்து வலமாக வந்து, நிலத்தின் மேல் விழுந்து வணங்கி, அதன் வெண்ணீற்று ஒளியைப் போற்றி நின்று, அது இறைவரின் அருள் என வியந்து
திருவைந்தெழுத்தை ஓதிப் பிள்ளையார் உலகம் எல்லாம் உய்தற்கென அதில் ஏறியருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 217
தொண்டர்
ஆர்த்தனர், சுருதிகள் ஆர்த்தன, தொல்லை
அண்டர்
ஆர்த்தனர், அகிலமும் ஆர்ப்புடன்
எய்தக்
கொண்டல்
ஆர்த்தன, முழவமும் ஆர்த்தன, குழுமி
வண்டுஅ
றாப்பொலி மலர்மழை ஆர்த்தது வானம்.
பொழிப்புரை : அடியவர் மகிழ்வொலி
செய்தனர். மறைகள் முழங்கின. பழைமையுடைய தேவர்கள் மகிழ்வொலி செய்தனர். மேகங்கள்
உலகம் உவக்குமாறு முழங்கின. முழவு இயங்கள் ஒலித்தன. கூட்டமாய்ச் சேர்ந்து வண்டுகள்
நீங்காத அழகிய மலர் மழையை வானம் சொரிந்தது.
பெ.
பு. பாடல் எண் : 218
வளையும்
ஆர்த்தன, வயிர்களும் ஆர்த்தன, மறையின்
கிளையும்
ஆர்த்தன, கிளைஞரும் ஆர்த்தனர், கெழுவும்
களைகண்
ஆர்த்ததொர் கருணையின் ஆர்கவின் முத்தின்
விளையும்
மாக்கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே.
பொழிப்புரை : சங்குகள் ஒலித்தன, ஊது கொம்புகள் ஒலித்தன, மறை வேள்விகள் ஒலித்தன, உறவினர் மகிழ்வொலி செய்தனர், உயிர்க்கு உயிராக இருந்தருளும் இறைவரின்
கருணையினால் பிணிக்கப்பட்ட முத்துக்களினின்று வீசும் பெருங்கதிர்களுடன் வெண்குடை
மேலே கவிழ்க்கப்பட்டு விளக்கம் பெற்றது.
பெ.
பு. பாடல் எண் : 219
பல்கு
வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு
நீற்றுஒளி யுடன்பொலி புகலிகா வலனார்
அல்கு
வெள்வளை அலைத்துஎழு மணிநிரைத் தரங்கம்
மல்கு
பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார்.
பொழிப்புரை : பெருகும்
வெண்கதிர்களின் ஒழுங்குடைய முத்துச் சிவிகையின் மீது திருநீற்று ஒளியுடன்
விளங்கும் சீகாழித் தலைவர், தங்கும் வெண்மையான
சங்குகளை வாரி எழுகின்ற அழகிய வரிசையான அலைகள் நிறைந்த பாற்கடலில் வளரும் திங்கள்
தோன்றினாற் போல எழுந்தருளி வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 220
நீடுதொண்டர்கள்
மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு
கொண்டுஎழு மகிழ்ச்சியின் மலர்க்கைமேல் குவித்தே
ஆடு
கின்றனர், அயர்ந்தனர், அளவுஇல் ஆனந்தம்
கூடு
கின்றகண் பொழிபுனல் வெள்ளத்தில் குளித்தார்.
பொழிப்புரை : நிறைந்த தொண்டர்களும், அந்தணர்களும் மற்றவர்களும் நெருங்கி
வந்து, தங்கள் உள்ளத்தில்
மீதூர்ந்து எழுகின்ற மகிழ்ச்சியினால் மலர்க்கைகளை மேலே குவித்துத் தன் வயம் இழந்த
நிலையில் ஆடினர்; அளவற்ற மகிழ்ச்சி
பொருந்திய கண்களினின்று பொழியும் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 221
செய்ய
பொன்புனை வெண்தர ளத்துஅணி சிறக்கச்
சைவ
மாமறைத் தலைவர்பால் பெறுந்தனிக் காளம்,
"வையம் ஏழுடன்
மறைகளும் நிறைதவத் தோரும்
உய்ய
ஞானசம் பந்தன்வந் தான்"என ஊத.
பொழிப்புரை : சிவந்த பொன்னாலாய
வெண்முத்துக்களின் அழகு சிறக்குமாறு உள்ளதும் சைவத்திற்கும் நான்மறைகட்கும் தலைவர்
ஆன சிவபெருமானிடத்தில் பெற்றதும்,
ஒப்பில்லாததுமான
எக்காளம் என்ற சின்னம், உலகு ஏழும்
நான்மறைகளும் நிறைந்த தவத்தை உடையவர்களும் உய்யுமாறு `திருஞானசம்பந்தன் வந்தான்\' என்று கூறி ஊதவும்,
பெ.
பு. பாடல் எண் : 222
சுற்றும்
மாமறைச் சுருதியின் பெருகுஒலி நடுவே
தெற்றி
னார்புரம் எரித்தவர் தருதிருச் சின்னம்,
"முற்றும் ஆனவள் ஞானமே
முலைசுரந்து ஊட்டப்
பெற்ற
பாலறா வாயன்வந் தான்" எனப் பிடிக்க.
பொழிப்புரை : சூழ்ந்து ஒலிக்கும்
பெருமறைச் சுருதிகளின் பெருமுழக்கத்தினிடையே பகைவரின் முப்புரங்களையும் எரித்த
இறைவர் அளித்தருளிய திருச்சின்னம் `ஞானமே வடிவாய அம்மையார்
தம் ஞானத் திருமுலை சுரந்து ஞான அமுது ஊட்டப் பெற்ற பாலறாவாயன் வந்தான்\' என ஊதவும்,
பெ.
பு. பாடல் எண் : 223
புணர்ந்த
மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த
நித்திலத்து இலங்குஒளி நலங்கிளர் தாரை,
"அணைந்த மாமறை
முதற்கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த
முத்தமிழ் விரகன்வந் தான்" என ஊத.
பொழிப்புரை : சூழவரும் மெய்த்தவ
முனிவர் குழுவுடன் செல்கின்றவர் முன்பு, இணைந்த
முத்துக்களின் விளங்கும் ஒளிப் பெருமை சூழ்ந்து கிளர்தற்கு இடமான தாரை என்ற
சின்னம் `பெரு மறைகளையும்
அவற்றின் வழித்தாய் வரும் எல்லாக் கலைகளையும் ஓதாமல் உணர்ந்த முத்தமிழ் விரகன்
வந்தான்\' என ஊதவும்,
பெ.
பு. பாடல் எண் : 224
தெருளும்
மெய்க்கலை விளங்கவும், பார்உளோர் சிந்தை
இருளும்
நீங்கவும், எழுதுசொல் மறைஅளிப்
பவர்தாம்
பொருளும்
ஞானமும் போகமும் போற்றிஎன் பாருக்கு
அருளும்
அங்கணர் திருஅரத் துறையைவந்து அணைந்தார்.
பொழிப்புரை : தெளிவைத்தரும்
உண்மைக் கலைகள் விளங் கும்படியும்,
அதனுடன்
உலகத்தில் உள்ளவரின் சிந்தையில் தங்கிய இருள் நீங்கும்படியும் எழுதும் சொல் மறையை
அளிப்பவரான ஆளுடைய பிள்ளையார்,
`போற்றி\' என்று வழிபடுவோர்க்குப் பொருளையும், ஞானத்தையும், இன்பத்தையும் அளிக்கும் சிவபெருமானின்
திருவரத்துறையை வந்து அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 225
வந்து
கோபுர மணிநெடு வாயில்சேய்த்து ஆகச்
சந்த
நித்திலச் சிவிகைநின்று இழிந்துதாழ்ந்து எழுந்து
சிந்தை
ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கிமுன் செல்ல
அந்தி
நாள்மதி அணிந்தவர் கோயில்உள் அடைந்தார்.
பொழிப்புரை : அத்திருப்பதிக்கு
அணுக வந்தருளிய பிள்ளையார், கோபுரவாயில் தொலைவிலே
தோன்றிய அளவில், அழகிய முத்துச்
சிவிகையினின்றும் கீழே இறங்கி நிலத்தில் விழுந்து பருவடிவாக விளங்கும்
இலிங்கத்திருமேனியாகிய அக்கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளத்தில் எழுந்த ஆசையும்
மகிழ்ச்சியும் மேலும் மேலும் பொங்கித் தமக்கு முன் செல்ல, மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச்
சந்திரனைச் சூடிய திருவரத்துறை இறைவரின் திருக்கோயிலின் உள் அடைந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 226
மன்னுகோயிலை
வலங்கொண்டு திருமுன்பு வந்து
சென்னி
யில்கரம் குவித்துவீழ்ந்து அன்பொடு திளைப்பார்
"என்னை யும்பொருளாக
இன் அருள்புரிந்து அருளும்
பொன்அடித்தலத்
தாமரை போற்றி" என்று எழுந்தார்.
பொழிப்புரை : நிலைபெற்ற அக்கோயிலை
வலம் வந்து, திருமுன்பு வந்து, தலைமீது கைகளைக் குவித்து நிலத்தில்
விழுந்து, அன்பில் திளைப்பவராய்
`என்னையும்
ஒருபொருளாகக் கொண்டு இனிய அருளைச் செய்யும் பொன்னடித் தாமரைகளுக்கு என்றும்
வணக்கம் செலுத்தும் கடப்பாடுடையேன்\'
என்று
எழுந்து போற்றினார்.
பெ.
பு. பாடல் எண் : 227
சூடி
னார்கர கமலங்கள், சொரிந்துஇழி கண்ணீர்
ஆடி
னார்திரு மேனியில், அரத்துறை விரும்பி
நீடி
னார்திரு அருட்பெருங் கருணையே நிகழப்
பாடி
னார்திருப் பதிகம், ஏழிசையொடும் பயில.
பொழிப்புரை : கைம்மலர்களைத்
தலைமேல் சூடிக்கொண்டார், பெருகி வழிகின்ற
கண்ணீர் ஒழுக்கால் திருமேனி நனைய ஆடினார். திருவரத்துறையை விரும்பித் தொன்றுதொட்டு
வீற்றிருந்தருளும் இறைவரின் கருணையை நினைந்து ஏழிசையுடன் பொருந்தத் திருப்பதிகம்
பாடினார்.
பெ.
பு. பாடல் எண் : 228
இசைவி
ளங்கிட இயல்பினில் பாடி,நின்று ஏத்தி,
மிசைவி
ளங்குநீர் வேணியார் அருளினால் மீண்டு
திசைவி
ளங்கிடத் திருவருள் பெற்றவர் சிலநாள்
அசைவுஇல்
சீர்த்தொண்டர் தம்முடன் அப்பதி அமர்ந்தார்.
பொழிப்புரை : ஏழ் இசையும்
பொருந்துமாறு திருவருட் கருணையைத் திருப்பதிகத்தால் போற்றிப் பாடி நிறைவாக்கி, நின்று வழிபட்டு, மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான
சடையை உடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கு நின்று மீண்டும் எழுந்தருளி, எத்திசையில் உள்ளவர்களும் சிவஞானம்
பெற்றுய்யும்படி திருவருள் பெற்றவரான பிள்ளையார், தம்நிலையில் தாழாத சிறப்புடைய
தொண்டர்களுடன், சில நாள்கள்
அத்திருப்பதியில், விரும்பி எழுந்தருளி
இருந்தார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
2.090 திருநெல்வாயிலரத்துறை பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
எந்தை
ஈசன்எம் பெருமான்
ஏறுஅமர் கடவுள் என்று
ஏத்திச்
சிந்தை
செய்பவர்க்கு அல்லால்
சென்றுகை கூடுவது
அன்றால்,
கந்த
மாமலர் உந்திக் கடும்புனல்
நிவாமல்கு கரைமேல்
அந்தண்
சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :மணம் பொருந்திய
மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த
சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , எம் தந்தை , ஈசன் , பெரியோன் , ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன்
பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால் , ஏனையோர்க்குக் கைகூடாதது .
பாடல்
எண் : 2
ஈர
வார்சடை தன்மேல்
இளம்பிறை அணிந்தஎம்
பெருமான்
சீருஞ்
செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள்
தொழச்செல்வது அன்றால்,
வாரி
மாமலர் உந்தி வருபுனல்
நிவாமல்கு கரைமேல்
ஆரும்
சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :சிறந்த மலர்களை
வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த
நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை
அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள்
தொழுது பெறுதற்கு இயலாதது .
பாடல்
எண் : 3
பிணி
கலந்தபுன் சடைமேல்
பிறைஅணி சிவன்எனப்
பேணிப்
பணி
கலந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல்வது
அன்றால்,
மணி
கலந்துபொன் உந்தி
வருபுனல் நிவாமல்கு
கரைமேல்
அணி
கலந்தநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :மணிகளையும்
பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல்
வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது
பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத
பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது .
பாடல்
எண் : 4
துன்னஆடை
ஒன்று உடுத்துத்
தூயவெண் ணீற்றினர்
ஆகி
உன்னி
நைபவர்க்கு அல்லால்
ஒன்றும் கைகூடுவது
அன்றால்,
பொன்னும்
மாமணி உந்திப்
பொருபுனல் நிவாமல்கு
கரைமேல்
அன்னம்
ஆரும்நெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே
பொழிப்புரை :பொன்னையும் சிறந்த
மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி
மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு
தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால்
ஏனையோருக்குக் கைகூடுவதன்று
பாடல்
எண் : 5
வெருகு
உரிஞ்சுவெம் காட்டில்
ஆடிய விமலன்என்று
உள்கி
உருகி
நைபவர்க்கு அல்லால்
ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு
உரிஞ்சுபூஞ் சோலை
மொய்ம்மலர்
சுமந்துஇழி நிவாவந்து
அருகு
உரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :மணம் தவழும்
பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில்
வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில்
ஆடும் விமலனே ! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால்
ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது .
பாடல்
எண் : 6
உரவு
நீர்சடைக் கரந்த
ஒருவன்என்று
உள்குளிர்ந்து ஏத்திப்
பரவி
நைபவர்க்கு அல்லால்
பரிந்துகை கூடுவது
அன்றால்
குரவ
நீடுஉயர் சோலைக்
குளிர்புனல்
நிவாமல்கு கரைமேல்
அரவம்
ஆருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :குராமரங்கள்
நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும்
நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன்
சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏத்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு
அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவ தில்லை ஆதலின் கை கூடாதது .
பாடல்
எண் : 7
நீல
மாமணி மிடற்று
நீறுஅணி சிவன்எனப்
பேணும்
சீல
மாந்தர்கட்கு அல்லால்
சென்றுகை கூடுவது
அன்றால்,
கோல
மாமலர் உந்திக்
குளிர்புனல்
நிவாமல்கு கரைமேல்
ஆலும்
சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :அழகிய மலர்களை
உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலை
கள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள் , நீல மணி போன்ற கண்டத்தினன் , நீறணிந்த சிவன் , என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு
அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது .
பாடல்
எண் : 8
செழுந்தண்
மால்வரை எடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த
ஊன்றிய விரலான்
போற்றிஎன்
பார்க்குஅல்லது அருளான்,
கொழுங்க
னிசுமந் துந்திக்
குளிர்புனல்
நிவாமல்கு கரைமேல்
அழுந்தும்
சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :கொழுமையான கனிகளைச்
சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த
நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை , செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப்
பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற
வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார் .
பாடல்
எண் : 9
நுணங்கு
நூல்அயன் மாலும்
இருவரும் நோக்கஅரி
யானை
வணங்கி
நைபவர்க்கு அல்லால்
வந்துகை கூடுவது
அன்றால்,
மணங்க
மழ்ந்துபொன் உந்தி
வருபுனல் நிவாமல்கு
கரைமேல்
அணங்கும்
சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே.
பொழிப்புரை :மணம் கமழ்ந்து
பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த
நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , நுட்பமான நூல்களை அறிந் துணர்ந்த பிரமன்
மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து
வழிபடுவார்க்கு வாய்க்குமே யன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது
பாடல்
எண் : 10
சாக்கி
யப்படு வாரும்,
சமண்படு வார்களும்
மற்றும்
பாக்கி
யப்பட கில்லாப்
பாவிகள் தொழச்செல்வது
அன்றால்,
பூக்க
மழ்ந்துபொன் உந்திப்
பொருபுனல் நிவாமல்கு
கரைமேல்
ஆர்க்கும்
சோலைநெல் வாயில்
அரத்துறை
அடிகள்தம்அருளே.
பொழிப்புரை :மலர்களின் மணம்
கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக்
கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் , திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும்
சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார் களும் ஆகிய , சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத
பாவிகளால் , தொழுது பெறுவதற்கு
இயலாதது.
பாடல்
எண் : 11
கறையின்
ஆர்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம்
பந்தன்
அறையும்
பூம்புனல் பரந்த
அரத்துறை அடிகள்தம்
அருளை,
முறைமை
யால்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம்
வினைபோய்ப்
பறையும், ஐயுறவு இல்லை,
பாட்டுஇவை பத்தும்வல்
லார்க்கே.
பொழிப்புரை :கருமை நிறம் அமைந்த
பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் , ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில்
அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும் . இஃது
உறுதி.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
திருத்தூங்கானை மாடத்துச் சுடர்க்
கொழுந்தின் அடி பரவி, பாங்காகத்
திருத்தொண்டு செய்து வாழும் நாள்,
திருஅரத்துறை
ஈசரைப் பணிந்து பாடிய திருப்பதிகம்.
பாடல்
எண் : 154
தூங்கானை
மாடத்துச் சுடர்க்கொழுந்தின் அடிபரவி,
பாங்குஆகத்
திருத்தொண்டு செய்துபயின்று அமரும் நாள்
பூங்கானம்
மணங்கமழும் பொருஇல்திரு அரத்துறையும்,
தேங்காவின்
முகில்உறங்கும் திருமுதுகுன் றமும்பணிந்து.
பொழிப்புரை : திருத்தூங்கானை
மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க் கொழுந்தான பெருமானின் திருவடிகளைப் போற்றி
செய்து, இயன்ற முறையில்
திருப்பணிகளும் செய்து, அத்திருப்பதியில்
விரும்பி எழுந்தருளியிருக்கும் நாள்களில், அழகிய காட்டுப் பூக்களின் மணம்
கமழ்கின்ற ஒப்பற்ற திருவரத்துறையினையும், தேன்
பொருந்திய சோலைகளில் மேகங்கள் தவழும் திருமுதுகுன்றத்தையும் வணங்கி.
குறிப்புரை : திருமுறைகளில்
திருநெல்வாயில் அரத்துறை எனக் குறிக்கப்பெறும் இத்திருப்பதி, இக்காலத்துத் திருவரத்துறை, திருவட்டுறை, என்று வழிமொழியப் பெறுகிறது. நெல்வாயில்
ஊர்ப் பெயரும், அரத்துறை கோயில்
பெயருமாம். திருவரத்துறையில் அருளிய பதிகம் `கடவுளை` எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப்
பதிகமாகும். திருமுதுகுன்றத்தில் அருளிய பதிகம் `கருமணியை` எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.
திருமுதுகுன்றம் என்பது இன்று விருத்தாசலம் என அழைக்கப்பெறுகிறது. திருமுதுகுன்றம்
என்பதே பழமையும் தகுதியும் உடைய பெயராகும்.
5. 003திருநெல்வாயில்
அரத்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கடவுளை, கடலுள் எழு நஞ்சுஉண்ட
உடல்
உளானை, ஒப் பாரிஇ லாதஎம்
அடல்
உளானை, அரத்துறை மேவிய
சுடர்
உளானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது
கடவுளும் , பாற்கடலுள் எழுந்த
நஞ்சு உண்டு தரித்த , அருட்டிருமேனியுடையவனும்
, ஒப்புமை சொல்லத்
தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும் ,
அரத்துறைத்
தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே .
பாடல்
எண் : 2
கரும்புஒப்
பானை, கரும்பினிற் கட்டியை,
விரும்புஒப்
பானை,விண் ணோரும் அறிகிலா
அரும்புஒப்
பானை, அரத்துறை மேவிய
சுரும்புஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது , கரும்பும் , கரும்பினிற் கட்டியும் ஒப்பானும் , விரும்பிய பொருளை ஒப்பானும் , தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு
போல்வானும் ஆகிய பெருமானையே .
பாடல்
எண் : 3
ஏறுஒப்
பானை, எல் லாவுயிர்க்
கும்இறை,
வேறுஒப்
பானை, விண் ணோரும் அறிகிலா
ஆறுஒப்
பானை, அரத்துறை மேவிய
ஊறுஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம்தொழுவது ஏறு
ஒப்பானும் , எல்லா உயிர்க்கும்
இறைவனாகச் சிறந்து நிற்பானும் ,
தேவரும்
அறியாநெறி ஒப்பானும் , அரத்துறைத் தலத்தை
மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே .
பாடல்
எண் : 4
பரப்புஒப்
பானை, பகல்இருள் நன்னிலா
இரப்புஒப்
பானை, இளமதி சூடிய
அரப்புஒப்
பானை, அரத்துறை மேவிய
சுரப்புஒப்
பானைக் கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது
திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும்
, இருளில்
நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும் , குறும்பையும் , அன்புகாரணமாக உண்டாகும் பாலின்
சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே ,
பிறரை
அன்று .
பாடல்
எண் : 5
நெய்ஒப்
பானை, நெய் யில்சுடர்
போல்வதுஓர்
மெய்ஒப்
பானை, விண் ணோரும்
அறிகிலார்,
ஐஒப்
பானை, அரத்துறை மேவிய
கைஒப்
பானைக் கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது
நெய்யும் , நெய்யிற் சுடர் போல்
விளங்கும் மெய்யும் , பெருவியப்பும்
போல்வானும் , தேவரும் அறியாதவனும்
அரத்துறை யென்னும் தலத்தை விரும்பிய ஒழுக்கமாவானுமாகிய பெருமானையே .
பாடல்
எண் : 6
நெதிஒப்
பானை, நெதியில் கிழவனை,
விதிஒப்
பானை, விண் ணோரும்
அறிகிலார்,
அதிஒப்
பானை, அரத்துறை மேவிய
கதிஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது நியதி
ஆவானும் , நியதியின் தலைவனும் , விதியாவானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , விச்சுவாதிளும் ஆகிய அரத்துறையென்னுந்
தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே .
பாடல்
எண் : 7
புனல்ஒப்
பானை, பொருந்தலர் தம்மையே
மினல்ஒப்
பானை,விண் ணோரும்
அறிகிலார்,
அனல்ஒப்
பானை, அரத்துறை மேவிய
கனல்ஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது புனலும்
, பொருந்தாதார்க்கு
மின்னலும் . அனலும் போல்வானும் ,
தேவர்களாலும்
அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே .
பாடல்
எண் : 8
பொன்ஒப்
பானை, பொன் னில்சுடர்
போல்வதுஓர்
மின்ஒப்
பானை, விண் ணோரும்
அறிகிலார்,
அன்ஒப்
பானை, அரத்துறை மேவிய
தன்ஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது , பொன்னும் , பொன்னின் சுடர் போன்ற மின்னலும் , அன்னையும் ஒப்பானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து
தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே .
பாடல்
எண் : 9
காழி
யானைக் கனவிடை ஊரும்மெய்
வாழி
யானை, வல் லோரும்என்று
இன்னவர்,
ஆழி
யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி
யானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம்தொழுவது , காழித்தலத்துக் கடவுளும் , பெருமையை உடைய விடையூரும் நித்தத்
திருமேனி உள்ளவரும் , பிறரால் வல்லோரும்
என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும் , ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய
திருஅரத்துறை அடிகளையே .
பாடல்
எண் : 10
கலைஒப்
பானை, கற்றார்க்கு
ஓர்அமுதினை,
மலைஒப்
பானை, மணிமுடி ஊன்றிய
அலைஒப்
பானை, அரத்துறை மேவிய
நிலைஒப்
பானைக்கண் டீர்நாம் தொழுவதே.
பொழிப்புரை : நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும் , மலையெடுக்கலுற்ற இராவணனை மணி
முடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும் , அரத்துறை
மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே .
திருச்சிற்றம்பலம்
சுந்தரர் திருப்பதிக
வரலாறு
ஏயர்கோன் கலிக்காம
நாயனார் புராணம்
பெரிய
புராணப் பாடல் எண் : 293
அங்கணரை
ஆமாத்தூர் அழகர்தமை அடிவணங்கித்
தங்கும்இசைத்
திருப்பதிகம் பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம்
பெருந்தொண்டை வளநாடு கடந்துஅணைந்தார்
செங்கண்வள
வன்பிறந்த சீர்நாடு நீர்நாடு.
பொழிப்புரை : உயிர்களுக்கு அருள்
வழங்கியருளும் அழகிய பெருமானாரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரை
வணங்கி, இசை பொருந்திய
திருப்பதிகம் பாடி, அப்பாற்சென்று, இந்நிலவுலகிற்கு மங்கலமாக விளங்கும்
தொண்டைநாடு என்னும் வளமுடைய நாட்டினைக் கடந்து, கோச்செங்கட் சோழன் தோன்றிய
சீர்மைமிகுந்த நாடாய நீர்வளமுடைய சோழ நாட்டினை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 294
அந்நாட்டின்
மருங்குதிரு அரத்துறையைச் சென்றுஎய்தி
மின்ஆரும்
படைமழுவார் விரைமலர்த்தாள் பணிந்துஎழுந்து
சொன்மாலை
மலர்க்கல்வா யகில்என்னும் தொடைசாத்தி
மன்ஆர்வத்
திருத்தொண்ட ருடன்மகிழ்ந்து வைகினார்.
பொழிப்புரை : அச் சோழநாட்டின்
அருகே விளங்கிய திருநெல்வாயில்அரத்துறை என்னும் கோயிலைச் சென்று சேர்ந்து, மின்ஒளி விளங்கும் மழுப்படையை உடைய
பெருமானின் நறுமணமுடைய மலரனைய திருவடிகளைப் பணிந்து, எழுந்து, சொல்லாக மலரும் மாலையாய, `கல்வாய் அகில்\' எனத் தொடங்கும் பாமாலை பாடிச் சாத்தி, மேலான ஆர்வமுடைய திருத்தொண்டருடன்
மகிழ்ந்திருந்தார்.
குறிப்புரை : `கல்வாய் அகில்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த
(தி.7 ப.3) இப்பதிகத்தில் `எற்றே ஒரு கண்ணிலன்' என 3ஆவது பாடலில் வரும் குறிப்பு, நம்பிகளின் வரலாற்றிற்கு அரணாகும்.
7. 003 திருநெல்வாயில் அரத்துறை பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கல்வாய்அகி
லும்,கதிர் மாமணியும்
கலந்து,உந்தி வரும்நிவ
வின்கரைமேல்
நெல்வாயில்
அரத்துறை நீடுஉறையும்
நிலவெண்மதி சூடிய
நின்மலனே,
நல்வாய்இல்செய்
தார், நடந் தார், உடுத்தார்
நரைத்தார், இறந் தார்என்று, நானிலத்தில்
சொல்லாய்க்கழி
கின்றது அறிந்துஅடியேன்
தொடர்ந்தேன், உய்யப் போவதொர்
சூழல்சொல்லே.
பொழிப்புரை : மலையிடத்துள்ள
அகில்களையும் , ஒளியை யுடைய
மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள
திருநெல்வாயில் அரத்துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும் , நிலவினை யுடைய வெள்ளிய பிறையைச் சூடிய
மாசற்றவனே, உலகியலில் நின்றோர்
அனைவரும் , ` நல்ல துணையாகிய
இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே
ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ; மூப்படைந்தார் ; இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை
உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன் ; ஆதலின் , அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப்
போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 2
கறிமாமிள
கும்மிகு வன்மரமும்
மிகஉந்தி வரும்நிவ
வின்கரைமேல்
நெறிவார்குழ
லார்அவர் காணநடஞ்செய்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
வறிதேநிலை
யாதஇம் மண்ணுலகின்
நரனாக வகுத்தனை, நான்நிலையேன்,
பொறிவாயில்இவ்
ஐந்தினை யும்அவியப்
பொருது, உன்னடி யேபுகும்
சூழல்சொல்லே.
பொழிப்புரை : கறிக்கப் படுகின்ற
மிளகையுடைய கொடியையும் , மிக்க வலிய
மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம்
பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில்
அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப்
பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய் ; ஆதலின் , நான் இறவாது இரேன் ; அதனால் , ` பொறி ` எனப்படுகின்ற , அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும்
அடங்குமாறு வென்று , உன் திருவடிக்கண்ணே
புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 3
புற்றுஆடுஅர
வம்அரை ஆர்த்துஉகந்தாய்,
புனிதா,பொரு வெள்விடை
ஊர்தியினாய்,
எற்றேஒரு
கண்இலன், நின்னைஅல்லால்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
மற்றேல்ஒரு
பற்றுஇலன் எம்பெருமான்,
வண்டார்குழ லாள்மங்கை
பங்கினனே
அற்றார்பிற
விக்கடல் நீந்திஏறி
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : புற்றின்கண்
வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே , தூய்மையானவனே , போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை
உடையவனே , எம் பெருமானே , வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய
உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே ,
திருநெல்வாயில்
அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , அடியேன் ஒருகண் இல்லாதவனாய்
இருக்கின்றேன் ; இஃது எத்தன்மைத்து
என்பேன் ! மற்றும் வினவின் , உன்னையன்றி வேறொரு
பற்றுக்கோடு இல்லேன் ; ஆதலின் , அடியேன் , இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக்
கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 4
கோஓடுயர்
கோங்குஅலர் வேங்கைஅலர்
மிகஉந்தி வரும்நிவ
வின்கரைமேல்
நீஇடுயர்
சோலைநெல் வாயில்அரத்
துறைநின்மல னே, நினை வார்மனத்தாய்,
ஓஒடுபு
னற்கரை யாம்இளமை,
உறங்கிவ்விழித்
தால்ஒக்கும் இப்பிறவி,
வாஅடியி
ருந்துவருந் தல்செய்யாது
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : கிளைகள் உயர்ந்த
கோங்க மரத்தின் மலர்களையும் , வேங்கை மரத்தின்
மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய
திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில்
வாழ்பவனே , இப்பிறப்பு , உறங்கியபின் விழித்தாற் போல்வது ; இதன்கண் உள்ள இளமையோ , ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும் ; ஆதலின் , ` என் செய்வது ` என்று மெலிவுற்று நின்று வருந்தாது , அடியேன் , இப் பிறவியிலிருந்து பிழைத்துப்
போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 5
உலவும்முகி
லில்தலை கல் பொழிய
உயர்வேயொடு இழிநிவ
வின்கரைமேல்
நிலவும்மயி
லார்அவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
புலன்ஐந்து
மயங்கி அகங்குழைய,
பொருவேலொர் நமன்தமர்
தாம்நலிய,
அலமந்தும
யங்கி அயர்வதன்முன்
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : உலாவுகின்ற
மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட , அந்நீர் , ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து வருகின்ற
நிவாநதியின் கரைமேல் உள்ள , விளங்குகின்ற மயில்
போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத் துறையின் கண்
எழுந்தருளியுள்ள மாசற்றவனே , ஐந்து புலன்களும்
தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும் , மனம் மெலியும்படியும் , போர் செய்கின்ற முத்தலை வேலை ( சூலத்தை
) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த , பற்றுக்கோடின்றி
, உணர்வு தடுமாறி
நின்று இளைத்தற்குமுன் , அடியேன் , இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய
ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 6
ஏலம்இல
வங்கம் எழில்கனகம்
மிகவுந்தி வரும்நிவ
வின்கரைமேல்
நீலம்மலர்ப்
பொய்கையில் அன்னமலி
நெல்வாயில் அரத்துறை
யாய், ஒருநெல்
வால்ஊன்ற
வருந்தும் உடம்புஇதனை
மகிழாதுஅழ காஅலந் தேன,இனியான்
ஆலந்நிழ
லில்அமர்ந் தாய், அமரா,
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : ` ஏலம் இலவங்கம் ` என்னும் மரங்களையும் , அழகிய பொன்னையும் மிகுதியாகத்
தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள , நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள்
நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளி யுள்ளவனே , அழகனே , ஆல் நிழலில் அமர்ந்தவனே , என்றும் இறவாதிருப்பவனே , ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது
வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதி யுடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி
உழன்றேன் ; அடியேன் இதனினின்றும்
பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள் .
பாடல்
எண் : 7
சிகரம்முகத்
தில்திரள் ஆர்அகிலும்
மிகவுந்தி வரும்நிவ
வின்கரைமேல்
நிகர்இல்மயி
லார்அவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
மகரக்குழை
யாய்,மணக் கோலமதே
பிணக்கோலம்
அதுஆம்பிறவி இதுதான்,
அகரம்முத
லின்எழுத்து ஆகிநின்றாய்
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : மலைச்
சிகரத்தினின்றும் , திரளாய் நிறைந்த
அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில்
உள்ள , உலகின் மயில்கள்
போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற
திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே , எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய
முதல் எழுத்துப்போன்று , பொருள்களுக்கெல்லாம்
முதற்பொருளாகி நிற்பவனே , இவ்வுடம்பு தான் , மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய்
மாறுகின்ற நிலையாமையை உடையது ; ஆதலின் , அடியேன் இதனினின்றும் பிழைத்துப்
போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 8
திண்தேர்நெடு
வீதி இலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ
ரித்துஅருளி,
ஞெண்டுஆடுநெ
டுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
பண்டேமிக
நான்செய்த பாக்கியத்தால்,
பரஞ்சோதிநின் நாமம்
பயிலப்பெற்றேன்,
அண்டா, அம ரர்க்குஅம
ரர்பெருமான்,
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : திண்ணிய தேர்களை உடைய
, நீண்ட தெருக்களை
யுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும்
முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி , நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த
, முல்லை நிலத்தையுடைய
திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , மேலான ஒளி வடிவினனே , தேவனே , தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத்
தலைவனே , நான் முற் பிறப்பிற்
செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல் லும் பேற்றினைப் பெற்றேன் ; இனி , அடியேன் , உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய
ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 9
மாணாஉரு
வாகிஒர் மண்அளந்தான்,
மலர்மேலவன் நேடியும்
காண்புஅரியாய்,
நீள்நீள்முடி
வானவர் வந்துஇறைஞ்சும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே,
வாணார்நுத
லார்வலைப்பட் டடியேன்
பலவின்கனி ஈயது
போல்வதன்முன்
ஆணோடுபெண்
ணாமுரு வாகிநின்றாய்
அடியேன்உய்யப்
போவதொர் சூழல்சொல்லே.
பொழிப்புரை : சிறப்பில்லாத குறள்
உருவாகி உலகத்தை அளந்த திருமாலும் ,
மலரின்கண்
இருக்கும் பிரமனும் தேடியும் காணுதற்கு அரியவனே , நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து
வணங்கு கின்ற , திருநெல்வாயில்
அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , ஆணும் பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு
நிற்பவனே , அடியேன் , ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது
மையலாகிய வலையிற்பட்டு , பலாப் பழத்தில்
வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன் ,
அவர்
மையலினின்றும் பிழைத்துப்போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .
பாடல்
எண் : 10
நீர்ஊரும்
நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனைத்
தேர்ஊர்நெடு
வீதிநன் மாடமலி
தென்நாவலர் கோன்,அடித் தொண்டன்,அணி
ஆரூரன்
உரைத்தன நல்தமிழின்
மிகுமாலையொர்
பத்துஇவை கற்றுவல்லார்
கார்ஊர்களி
வண்டுஅறை யானைமன்னர்
அவர்ஆகியொர்
விண்முழுது ஆள்பவரே.
பொழிப்புரை : நீர் பாய்கின்ற நீண்ட
வயல்கள் சூழ்ந்த , முல்லை நிலத்தை உடைய
திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளி யிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை , தேர் ஓடும் நீண்ட தெருக்களில் நல்ல
மாடமாளிகைகள் நிறைந்த, தென்னாட்டில் உள்ள
திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும் , சிவபெருமானுக்கு
அடித் தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய , நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த
பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்று உணரவல்லவர், கருமை மிக்க, களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க
வருகின்ற யானையை உடைய மன்னர்களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு , பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற
விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment